tamilnaduepaper
❯ Epaper

மோட்ச தீபம்

மோட்ச தீபம்
Join Whatsapp Channel Join Telegram Channel

 

 

பொதுவாகவே விளக்கு ஏற்றப்படும் இடத்தில் இருள் நீங்கி ஒளி தெரியும். அதுபோல வாழ்க்கையில் இருள் நீங்கி, இன்னல் நீங்கி ஏற்றம் பெறுவதற்கு கோயிலில் விளக்கு ஏற்றுவது நல்லது. 

 

மோட்ச தீபம் என்றால் இறந்த மறைந்த முன்னோர்கள், மறைந்தாலும் நம்முடைய மனதில் மறவாமல் இருக்க கூடிய முன்னோர்கள் இறந்த திதியில் ஏற்றக்கூடிய ஒரு விளக்கு.

 

நிறைய பேர் ஆர்வமிகுதியில் உயிரிழந்தவர்களின் படத்திற்கு எல்லா நாட்களும் மோட்ச தீபம் ஏற்றுகின்றனர். மோட்ச தீபத்தை வீட்டில் ஏற்றுவதை விட கோயிலில் ஏற்றுவது சிறப்பு என சாஸ்திரங்கள் சொல்கின்றன. இதுகுறித்து மேலும் விரிவாக நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

 

*மோட்ச தீபம் முக்கியத்துவம்*

 

மோட்ச தீபம் முதன் முறையாக முன்னோரின் திதி வரக்கூடிய நாளில் ஏற்றவேண்டும். நாம் வயிற்றில் கருவாக உண்டாகும் போதே வாழ்க்கை விதி எழுதப்பட்டு விடும். எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும் ஒரு சில தடைகளால் வாழ்க்கையில் முன்னேற்றம் தாமதம் ஆகும்.

 

அப்படியான தடைகளை, விதிகளை மாற்றுவதற்கு ஒரு சில திதிகள் உண்டு. முன்னோர்களின் இறந்த திதியை சரியாக கணக்கிட்டு விளக்கு ஏற்றினால் உங்களுடைய வாழ்க்கையில் உள்ள தடைகள் நீங்கும். ஒரு சில நாட்களிலேயே வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே உணரலாம்.

 

*மோட்ச தீபம் ஏற்றும் நாள், நேரம்*

 

உங்களுடைய பரம்பரை, தலைமுறையின் நன்மைக்காக மோட்ச தீபம் ஏற்றுங்கள். முன்னோரின் திதி தெரியவில்லை என்றால் சனிக்கிழமைகளில் மாலை நேரத்தில் மோட்ச தீபம் ஏற்றுங்கள்.

 

• முன்னோரின் திதி நாள்

• சனிக்கிழமை

• அஷ்டமி திதி

• நவமி திதி

• அமாவாசை திதி

• பிரதமை திதி

 

ஆகிய நாட்களில் மோட்ச தீபம் ஏற்றலாம்.

 

 

 

உங்களுடைய வீட்டில் ஏற்றுவதை விட கோயிலில் மோட்ச தீபம் ஏற்றுவது சிறப்பு. கடற்கரை, ஆலமரம், அரசமரம், வேப்பமரங்களின் அடியில் மோட்ச தீபம் ஏற்றி முன்னோர்களிடம் வேண்டிக் கொள்ளுங்கள். 

 

அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, நம்முடன் வாழ்ந்த பலரின் அருமை, பெருமை உயிருடன் இருக்கும் போது புரிவதில்லை. அவர்கள் அனைவருமே நம்முடைய நன்மைக்காக சிரமப்பட்டவர்கள்.

 

இதற்கு ஒரு சிறிய தீபம் ஏற்றினால் மோட்சம் கிடைக்கும். மோட்ச தீபம் தொடர்ந்து ஏற்றுவதால் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள், தீய குணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலகி நல்ல எண்ணங்கள் வார்க்கும்.

எம் அசோக்ராஜா _________

அரவக்குறிச்சிப்பட்டி______

திருச்சி __620015___________

_

ராசி பலன்

நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்தவர்களின் சந்திப்புகள் மனதிற்கு ஒருவித மாற்றத்தை உருவாக்கும். வியாபார பணிகளில் இழுபறிகள் குறைந்து லாபங்கள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களுடன் பேசும்பொழுது கருத்துக்களில் கவனம் வேண்டும். தனவரவுகளில்... மேலும் படிக்க

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். சமூகப் பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். துறை நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். வாகன வசதிகள் மேம்படும். அரசுப் பணிகளில் அனுகூலம்... மேலும் படிக்க

விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். உணவு விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். தடைப்பட்ட பணிகள் முடியும். தெய்வீக பணிகளில் ஈடுபாடு மேம்படும். வியாபார பணிகளில் நிதானம் வேண்டும். பணி தொடர்பான பயணங்கள் கைகூடும். மனதளவில் நினைத்த... மேலும் படிக்க

எதிலும் அவசரப்பட்டு செயல்படுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்களிடம் வளைந்து கொடுத்து செல்வது நல்லது. வரவேண்டிய வரவுகள் தாமதமாக கிடைக்கும். உயர் அதிகாரிகள் இடத்தில் பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத சில பொறுப்புகளால்... மேலும் படிக்க

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களுடன் சிறுதூர பயணங்கள் சென்று வருவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். தன வரவுகள் திருப்தியாக இருக்கும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய துறைகளில்... மேலும் படிக்க

கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். குருமார்களின் சந்திப்புகள் ஏற்படும். வழக்கு சார்ந்த செயல்களில் சில மாற்றம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். பொது வாழ்வில் சில மாற்றமான தருணங்கள்... மேலும் படிக்க

குடும்ப வருமானத்தை மேம்படுத்துவீர்கள். அக்கம், பக்கம் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். புது விதமான எண்ணங்கள் பிறக்கும். சக ஊழியர்கள் இடத்தில் நிதானம் வேண்டும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள்.... மேலும் படிக்க

உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தொழில் நிமித்தமான தொடர்புகள் அதிகரிக்கும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். உத்தியோக பணிகளில்... மேலும் படிக்க

அக்கம், பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். தன்னம்பிக்கையுடன் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். கணவன், மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் காணப்படும்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் மறைமுகமான ஆதரவுகள் கிடைக்கும். நண்பர்கள் வழியில் விரயங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். உபரி வருமானம் மேம்படும். பொன், பொருள் பற்றிய சிந்தனைகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் அலைச்சல் உண்டாகும்.... மேலும் படிக்க

முன் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. உறவுகள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். பயணம் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். வர்த்தக பணிகளில் கவனத்துடன் செயல்படவும். சக ஊழியர்கள் இடத்தில் விவேகம் வேண்டும். தவறிய சில... மேலும் படிக்க

கடன் சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். ஆடம்பரமான செலவுகளால் சேமிப்புகள் குறையும். உடல் நலத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் மனதளவில் சில குழப்பம் தோன்றி மறையும். பணிகளில் சூழ்நிலை அறிந்து... மேலும் படிக்க