எம்.பி முக்கியமல்ல; விஜயகாந்த் மகன் முக்கியம்: விஜய பிரபாகரன் கண்ணீர் மல்க பேச்சு
Aug 10 2025
19

ஆகஸ்ட் 22-ம் தேதி ‘கேப்டன் பிரபாகரன்’ மறுவெளியீடு செய்யப்படுகிறது. இதன் புதிய ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பல்வேறு திரையுலக பிரபலங்களுடன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனும் கலந்துக் கொண்டார். இந்த விழாவில் பேசும்போது கண்ணீர் மல்க பேசினார் விஜய பிரபாகரன்.
இந்த விழாவில், “’கேப்டன் பிரபாகரன்’ பட சமயத்தில் பிறந்ததால் எனக்கு பிரபாகரன் என்று பெயரிட்டதாக பலரும் கூறுவார்கள். எம்.பி எல்லாம் எனக்கு முக்கியமல்ல. கடைசி வரை விஜயகாந்த் மகன் என்பதே முக்கியம். அப்பா இறந்து ஒரு வருடமாகிவிட்டது இன்னும் அழுதுக் கொண்டிருக்கிறான் என்று பலரும் கிண்டல் செய்கிறார்கள். தோல்வியை நினைத்து அழவில்லை, என்னை சூழ்ச்சியில் தோற்கடித்துவிட்டார்கள் என அழவில்லை. எங்கப்பாவை மிஸ் பண்றேன், அழுகிறேன்” என்று பேசினார் விஜய பிரபாகரன்.
ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த், சரத்குமார், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடிப்பில் 1991-ம் ஆண்டு வெளியான படம் ‘கேப்டன் பிரபாகரன்’. விஜயகாந்த் நடிப்பில் வெளியான 100-வது படம், ’கேப்டன்’ என்ற அடைமொழி கிடைத்த படம் என்று பல்வேறு விஷயங்கள் இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியின் மூலம் அமைந்தது குறிப்பிடத்தக்கது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?