கடலோர காவல் படை சார்பில் இந்தியா-இலங்கை எல்லையில் சுதந்திர தின கொண்டாட்டம்

கடலோர காவல் படை சார்பில் இந்தியா-இலங்கை எல்லையில் சுதந்திர தின கொண்டாட்டம்

தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டம்.

ராமேசுவரம் / முதுமலை: கடலோரக் காவல் படை சார்​பில் இந்​தி​யா-இலங்கை எல்​லைப் பகு​தி​யான தனுஷ்கோடி அரு​கே​யுள்ள அரிச்​சல்​முனை​யில் நேற்று சுதந்​திர தின விழா கொண்​டாடப்​பட்​டது. இதையொட்​டி, தேசி​யக் கொடிகளை ஏந்​திய வண்​ணம் கடலோரக் காவல் படை வீரர்கள் வலம் வந்​தனர்.


இந்​திய கடலோரக் காவல்படை முகாம் சார்​பில் தனுஷ்கோடி கடல் பகு​தி​யில் சுதந்​திர தின விழா​கொண்​டாடப்​பட்​டது. அப்​போது ஃஹோவர் கிராப்ட் ரோந்​துப் படகில், தேசி​யக் கொடிகளை ஏந்​திய வண்​ணம் கடலோரக் காவல் படை வீரர்​கள் வலம் வந்​தனர். தொடர்ந்​து, தனுஷ்கோடி அரிச்​சல்​முனை கடற்​கரை​யில் கொடியேற்று விழா நடை​பெற்​றது.


மேலும், தனுஷ்கோடி கடற்​பகு​தி​யில் மூவண்ணக் கொடியை பிடித்​துக் கொண்டு கடலோரக் காவல் படை வீரர்​கள் நீச்​சல் அடித்தனர். அதே​போல, பாம்​பன் சாலைப் பாலத்​தில் தேசி​யக் கொடி​யுடன் இந்​திய கடலோரக் காவல் படை​யினர் அணிவகுத்து நின்​றனர்​.



தனுஷ்கோடி கடல் பகுதியில் மூவண்ணக் கொடியைப் பிடித்துக்

கொண்டு நீச்சல் அடித்த கடலோர காவல் படை வீர்கள்.

யானைகள் மரியாதை... நீல​கிரி மாவட்​டம் முது​மலை புலிகள் காப்​பகத்​தில் உள்ள தெப்​பக்​காடு யானை​கள் முகாமில், சுதந்​திர தினத்​தையொட்டி யானை​கள் தேசி​யக் கொடிக்கு மரி​யாதை செலுத்​தின. தெப்​பக்​காடு யானை​கள் முகாமில் 20-க்​கும் மேற்​பட்ட வளர்ப்பு யானை​கள் உள்​ளன.


இங்கு நேற்று சுதந்​திர தின விழா விமரிசை​யாகக் கொண்​டாடப்​பட்​டது. யானை​கள் அணிவகுத்து நிற்க வைக்​கப்​பட்​டு, அவற்​றின் மீது தேசி​யக் கொடியை ஏந்​திய​வாறு பாகன்​கள் அமர்ந்​திருந்​தனர். புலிகள் காப்பக இணை இயக்​குநர் வித்யா தேசி​யக் கொடியை ஏற்​றி​வைத்​தார்.



முதுமலை தெப்பக்காட்டில் உள்ள யானைகள் முகாமில் நேற்று

நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்ற யானைகளின்

மீது தேசியக் கொடியுடன் அமர்ந்திருந்த பாகன்கள்.

அப்​போது, வளர்ப்பு யானை​கள் தும்​பிக்​கையை உயர்த்தி பிளிறியபடி தேசி​யக் கொடிக்கு மரி​யாதை செலுத்​தின. யானை​களின் பிளிறல் அங்கு கூடி​யிருந்த சுற்​றுலாப் பயணி​களை மெய்​சிலிர்க்க வைத்​தது. தொடர்ந்​து, அனைத்து யானை​களுக்​கும், கரும்​பு, வெல்​லம் உள்​ளிட்ட உணவு​கள் வழங்​கப்​பட்​டன.


இதை அங்​கிருந்த சுற்​றுலாப் பயணி​கள் ஆர்​வத்​துடன் ரசித்​தனர். இதே​போல, குன்​னூரில் 79-வது சுதந்​திர தின விழாவையொட்டி, உயிர்​நீத்த ராணுவ வீரர்​களின் போர் நினைவு சதுக்​கத்​தில் மலர் வளை​யம் வைத்து மரி​யாதை செலுத்​தப்​பட்​டது. இதில் ராணுவ அதி​காரி​கள், வீரர்​கள் மற்​றும் முன்​னாள் ராணுவத்​தினர் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%