சென்னை, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ரூ.11 கோடியில் புதிய விளையாட்டு விடுதி: உதயநிதி ஸ்டாலின் அடிக்கல்

சென்னை, ஆக 23–
சென்னை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் புதிய விளையாட்டு விடுதி, புதுப்பிக்கப்பட உள்ள பார்வையாளர் மாடம், புதிதாக கட்டப்பட உள்ள முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் என மொத்தம் 10.89 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான விளையாட்டு மேம்பாட்டு உள்கட்டமைப்பு பணிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
கோபாலபுரம் கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 90 மாணவர்கள் தங்கி குத்துச்சண்டை பயிற்சி பெறும் வகையில் புதிய விளையாட்டு விடுதி, உணவருந்தும் கூடம், சமையலறை, பயிற்சி மேற்கொள்ளும் பகுதி ஆகிய வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம், நேரு விளையாட்டு வளாகத்தில் பார்வையாளர்கள் மாடம் 4.89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைத்து, புதுப்பிக்கப்பட உள்ளது.
மேலும், கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் சட்டமன்றத் தொகுதியில் 200 மீட்டர் தடகள (மண்) பாதை, கையுந்துபந்து, கபாடி, கூடைப்பந்து, இறகுப்பந்து, கோ-கோ ஆடுகளங்கள், நீளம் தாண்டுதல் பகுதி ஆகிய விளையாட்டு வசதிகள் மற்றும் நுழைவு வாயில், நிர்வாக அலுவலக கட்டடம், கழிப்பறை வசதி ஆகிய வசதிகளுடன் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம் கட்டப்பட உள்ளது. உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் சென்னை கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி வளாகத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாககட்டப்பட உள்ள விளையாட்டு விடுதி, கோயம்புத்தூர் மாவட்டம் நேரு விளையாட்டு வளாகத்தில் 4.89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட உள்ள பார்வையாளர் மாடம், கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் சட்டமன்றத் தொகுதியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள சிறு விளையாட்டு அரங்கம் என மொத்தம் 10.89 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான விளையாட்டு மேம்பாட்டு உள்கட்டமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சி யில், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் நா.எழிலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?