நூல் அறிமுகம் மற்றும் பாராட்டு விழா

நூல் அறிமுகம் மற்றும் பாராட்டு விழா


தஞ்சாவூர் மாவட்டம் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் தஞ்சாவூர் ஜவுளி செட்டி தெருவில் அமைந்துள்ள அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கக் கட்டடத்தில் விடுதலை நாள் சிறப்பு நிகழ்ச்சியாக நாளை (15.08.2025) வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு திருமிகு. க.அன்பழகன் அவர்கள் (பொதுக்குழு உறுப்பினர் மக்கள் சிந்தனைப் பேரவை) தலைமையில் மு.செல்லப்பன் அவர்கள் எழுதிய வீரத்தியாகி விஸ்வநாததாஸ் நூல் அறிமுகமும், திருமிகு.கரந்தை கி.ஜெயக்குமார் அவர்களின் (பொதுக்குழு உறுப்பினர் மக்கள் சிந்தனைப் பேரவை) அறிமுகவுரையும்.

அதன் பிறகு விடுதலைப் போராட்டத் தஞ்சைத் தியாகி டி.ஆர்.வி. நாராயணசாமி நாயுடு அவர்கள் வாரிசு என். சுபாஷ் அவர்களுக்குப் பாராட்டு

அதனைத் தொடர்ந்து திருமிகு என். சுபாஷ் அவர்களின் இந்தியன் வங்கி (பணி நிறைவு) ஏற்புரையும் நடைபெற்ற உள்ளது. அனைவரும் வருக .

நூல் வெளியீட்டகம்,

எண்.845, நெய்தல், புதிய வீட்டு வசதி வாரியம், தஞ்சாவூர் . கைபேசி : 9443476740

இந்நூலின் பிரதியைப் பெற கைபேசி : 99446 86466

செய்தி: *T.P.குமரன், மகர்நோம்புச்சாவடி, தஞ்சாவூர்.*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%