பரங்கிப்பேட்டை மெயின் ரோடு அருள்மிகு ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலயத்தில் இன்று சங்கடஹர சதுர்த்தி

பரங்கிப்பேட்டை மெயின் ரோடு அருள்மிகு ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலயத்தில் இன்று (10.09.2025) புதன்கிழமை இரவு 7.30 மணி அளவில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாடு இ பேப்பர் டாட் காம் சார்பாக அதனுடைய வாசகர்களது பெயர் நட்சத்திரம் ராசி முதலியவற்றால் சங்கல்பம் செய்து விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனைகள் செய்விக்கப்பட்டது. மூலவருக்கு சந்தன காப்பும், உற்சவருக்கு விசேஷ அலங்காரங்களும் செய்விக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரது அருளை பெற்றார்கள். பக்தர்களுக்கு அருள் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை சிவஸ்ரீ சபாரத்தின குருக்களும், சிவஸ்ரீ சிவக்குமார் குருக்களும் செய்து வைத்தார்கள்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?