
நாகர்கோவில், ஆக. 15-
குமரி மாவட்டம் *முட்டம் கிராமத்தில் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் ஒரே நாளில் 37 சிசிடிவி கேமராவின் செயல்பாட்டினை மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதில் எஸ்.பி.பேசியது-
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கிராமங்களில் ஊர் காவல் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் இதுவரையிலும் 1450 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
கேமராக்களை ஏன் மூன்றாவது கண் என்று சொல்கிறோம் என்றால் குற்றங்கள் நடவாமல் தடுக்க, நடந்த குற்றத்தை யார் செய்தார்கள் என்பதை கண்டுபிடிக்க,
குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் தண்டனை வாங்கி கொடுப்பதற்கு பயன்படுகிறது.▫️எவ்வளவு அதிகமாக எண்ணிக்கையில் கேமராக்கள் பொருத்துகிறோமோ அவ்வளவு அதிகமாக நமது ஊர் பாதுகாப்பாக உள்ளது என்று உணரலாம்
▫️கன்னியாகுமரி மாவட்டத்தில் எல்லா மக்களும் கஷ்டப்பட்டு உழைத்து பணம் சிறுக சேமித்து அதை வெளிநாடுகளில் வேலைக்கு செல்வதாக தெரியாத நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாறுகிறார்கள்.▫️அரசாங்கத்தில் பதிவு பெற்று சிட்பண்ட்நடத்துகிறாரா என்று சோதனை செய்து அதில் பணத்தை முதலீடு செய்ய வேண்டும்.
▫️நீங்கள் காவல்துறையினரிடம் வந்து பதிவு பெற்ற ஏஜென்சி தானா என்று தகவலை பெற்றுக் கொள்ளலாம்.▫️ஒருமுறைக்கு இருமுறை சோதனை செய்த பின் நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கொடுக்க வேண்டும். ▫️எல்லோரிடமும் மொபைல் போன் உள்ளது அதில் தேவையில்லாத link தொட வேண்டாம் வேண்டாம் டிஜிட்டல் arrest என்ற ஒரு நடைமுறை போய்க்கொண்டிருக்கிறது அதில் போலியாக காவல் துறை அதிகாரி போல பேசி பணத்தை வாங்குகிறார்கள்
எனவே எந்த லிங்கையும் கிளிக் செய்ய வேண்டாம்.
▫️இந்த ஊர் காவல் கண்காணிப்பு திட்டத்தில் உள்ள காவலர் வாரத்தில் மூன்று முறை ஊருக்கு வருவார் அவரிடம் உங்கள் குறைகளை கூறலாம் இல்லையென்றால் என்னுடைய whatsapp நம்பர் flexல் இருக்கும் அதில் நீங்கள் தகவல் கூறலாம். ▫️நீங்கள் காவல்துறையை கண்டு பயப்பட வேண்டிய தேவையில்லை. எல்லாத்தையும் சரி பண்ணி கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இவ்வறு எஸ்பி கூறினார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?