
ஆற்காடு,ஆக.15,
ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நேஷனல் வெல்பர் சங்கம் சார்பில் சங்க அலுவலகத்தில் 79-வது சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தலைவர் கே.முஹமதுஅயூப் தலைமை வகித்தார்.
நிர்வாகிகள் அ.முஹமது தமீம், எச்.முஹமது ஹாஷிம், யி.முஹமது ஹலீம், வி.அன்சர் அஹமது, யி.முஹமதுஉஸ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துணைத் தலைவர் கே.முஹமது இத்ரீஸ் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக ஊடகவியலாளர்
முக்தார் அஹமது கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்
விழாவில் மேல்விஷாரம் முஸ்லிம் கல்விச் சங்க துணைத் தலைவர்.இப்திகார் அஹமது, மற்றும் கே.இம்ரான் அஹமது ஆகியோர்கலந்து கொண்டு தன்னார்வலர்களை பாராட்டி கௌரவித்தனர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் பொருாளர் முஹமது பஷீம், துணை செயலாளர் கேஓ.நிஷாத் அஹமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?