
வந்தவாசி, ஆக 08:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சௌந்தர்யபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ அம்புஜவல்லி நாயக சமேத ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் உள்ள ருண விமோசன ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு பிரதோஷ வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு நடைபெற்ற திருமஞ்சன நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பிறகு மகா தீபாராதனை நடந்தேறியது. இந்த வைபவத்தில் பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
பா. சீனிவாசன், வந்தவாசி.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%