
வந்தவாசி, ஆக 18:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கீழ்ப்பாக்கம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ கரியமாணிக்க வரதராஜப் பெருமாள் கோவிலில் 29 ஆம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் உறியடி வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த வைபவத்தில் மூல மூர்த்திகளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு விசேஷ திருமஞ்சனம் நடந்தேறியது. உற்சவ மூர்த்தி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இரவு உறியடி வைபவம் நடைபெற்றது. பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
பா. சீனிவாசன், வந்தவாசி.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%