tamilnadu epaper

காயாம்பூச் சேலைகட்டி கரையோரம் போறவளே

காயாம்பூச் சேலைகட்டி கரையோரம் போறவளே

தாழம்பூ கொண்டையிலே

மல்லிகையும் மணக்குதடி 

 

மனசத்தான் கெறக்குதடி

ஆளைத்தான் இழுக்குதடி 

 

கடைக்கண் பார்வையாலே

கடந்து செல்கிறாயே 

 

நெஞ்சமும் துடிக்குதடி

நெருங்கியே வந்தாலென்ன  

 

ஆசையும் பெருகுதடி

அணைக்கத்தான் தோணுதடி 

 

முல்லைப்பூச் சிரிப்பழகி

முன்னழகில் பேரழகி 

 

ஒன்நெனப்புதான் கூடுதடி

நித்தமும் ஏங்குறேன்டி 

 

காயாம்பூச் சேலைகட்டி 

கரையோரம் போறவளே 

 

பவுசாத்தான் போகாதே

என்னையும் பாரேன்டி 

 

செத்த நில்லேன்டி

பேசலாம் வாயேன்டி 

 

சொக்கித்தான் நிக்குறேனே

சுந்தரி ஒன்னழகுல 

 

எனக்குள்ளே நுழைந்துதான்

சீண்டித்தான் பாக்குறியே 

 

வம்பளத்து போறியே

வாலிபத்தை உசுப்புறியே 

 

காதலும் உண்டானதே

காந்தவர்க் கண்ணழகியே 

 

என்னைத்தான் ஏத்துக்கடி நெஞ்சுக்குள்ளே வச்சுக்கடி 

 

காலமெல்லாம் புருசன் பொஞ்சாதியா வாழ்ந்திடலாம்

 

பெ.வெங்கட லட்சுமி காந்தன்.

விருதுநகர்