Wednesday, 01 July 2026, 05:11 AM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / Life Style / Article

Life Style

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - அண்ணாமலை வரவேற்பு! - News7 Tamil

Published On: 2026-06-26 21:48:45 | Reporter: Admin

News Image

அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “2022-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட சாலை ஒப்பந்தங்களைச் செயல்படுத்துவதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, முன்னாள் திமுக அமைச்சர் E.V. வேலு அவர்களின் இல்லம் மற்றும் தொடர்புடைய இடங்களில், தவெக அரசின் உத்தரவின் பேரில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை நேற்று சோதனை நடத்தி, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது. முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் எழுந்த ஊழல் புகார்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள தவெக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை நான் வரவேற்கிறேன். இவ்வழக்குகள் விரைவாக முடிவுக்குக் கொண்டுவரப்படுவதையும், குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்படுவதையும் தவெக அரசு உறுதி செய்யும் என்று நான் மனதார நம்புகிறேன். இதே சூழலில், கடந்த 5 ஆண்டுகளில் வெளிச்சத்திற்கு வந்த பின்வரும் முறைகேடுகள் குறித்தும் தவெக அரசு கவனம் செலுத்தி, விசாரணைக்கு உத்தரவிட்டு, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்: பிஜிஆர் எனர்ஜி ஊழல் – விதிமுறைகளை மீறி மீண்டும் ஒப்பந்தம் வழங்கப்பட்டு, பின்னர் அது வெளிச்சத்துக்கு வந்த பிறகு ரத்து செய்யப்பட்ட விவகாரம். ஊட்டச்சத்து கிட் ஊழல் – ஆவின் நிறுவனம் தயாரிக்க முன்வந்த போதிலும், தனியார் நிறுவனங்களிடமிருந்து அதிக விலையில் சத்துமாவு கொள்முதல் செய்யப்பட்ட விவகாரம். பொங்கல் வேட்டி ஊழல் – பருத்திக்குப் பதிலாக அதிக அளவு பாலியஸ்டர் பயன்படுத்தப்பட்டது; இதற்கான ஆதாரங்கள் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மாநில போக்குவரத்துத் துறையில் பல்வேறு ஊழல்கள் – ரெப்ளக்டிங் மற்றும் பின்புற அடையாள பலகைகள் கொள்முதல் உள்ளிட்ட பல விவகாரங்கள். தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் ஊழல் – பூச்சிக்கொல்லி மருந்துகள் கொள்முதல். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட ஊழல். நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் ஒரு மர்மத்தை விடுவிப்பதற்கும் தவெக அரசு நேரம் ஒதுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரசிகர் மன்றமும், ‘நோபல் ஸ்டீல்ஸ்’ நிறுவனமும் ஒரே முகவரியில் செயல்பட்ட விசித்திரமான ஒற்றுமை குறித்தும், முன்னாள் முதல்வர் M.K. ஸ்டாலின் அவர்கள் துபாய் சென்று வந்த உடனேயே ‘நோபல் ஸ்டீல்ஸ்’ நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.1,000 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தது குறித்தும் பல ஆண்டுகளாக நாங்கள் கேள்வி எழுப்பி வருகிறோம். அந்த முதலீடு இன்னும் அறிவிப்பாகவே உள்ளது; அது வேறொரு நாளுக்கான விவாதம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “மண்டாடி” படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு! INDvsIRE: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு..! “என்.எல்.சி பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட வேண்டும்” – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல் “உங்கள் நம்பிக்கையே எனது மிகப்பெரிய பலம்” – ராகுல் காந்தி!

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7