Wednesday, 01 July 2026, 10:20 AM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / News / Article

News

குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது!

Published On: 2026-06-26 20:08:55 | Reporter: Admin

News Image

தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியில் குடும்பத் தகராறின் போது மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாளமுத்து நகர் பகுதியைச் சேர்ந்த சுடலைமணி (35), தனது முதல் மனைவியைப் பிரிந்த நிலையில் கார்த்திகா (28) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். குடும்பப் பிரச்சினை காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று (வியாழக்கிழமை) மீண்டும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சுடலைமணி, வீட்டில் இருந்த கத்தியால் கார்த்திகாவைக் குத்தியதாக போலீசார் தெரிவித்தனர். படுகாயமடைந்த கார்த்திகாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கார்த்திகா அளித்த புகாரின் பேரில், தாளமுத்து நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுடலைமணியைக் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7