Wednesday, 01 July 2026, 12:56 PM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / News / Article

News

இரவு 10 வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? - News7 Tamil

Published On: 2026-06-26 19:39:58 | Reporter: Admin

News Image

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுமார் 0.9 கி.மீ உயரத்தில் தமிழக கடலோர பகுதிகளின் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இரவு 10 வரை 7 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டி20 மகளிர் உலக கோப்பை : இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு! அதிமுக துணைப் பொதுச் செயலராக எஸ்.பி. வேலுமணி நியமனம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! டி20 மகளிர் உலக கோப்பை : வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி! “ஆட்டோ இம்யூன்(Autoimmune) நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன்” – நடிகர் விஷ்ணு விஷால்!

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7