Tuesday, 30 June 2026, 09:42 PM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / News / Article

News

நெல்லை அதிவிரைவு ரயில் தாழையூத்து வரையே இயக்கப்படும்

Published On: 2026-06-26 22:54:39 | Reporter: Admin

News Image

சென்னை எழும்பூரிலிருந்து சனிக்கிழமை (ஜூன் 27) இரவு புறப்பட்டு திருநெல்வேலி செல்லும் நெல்லை அதிவிரைவு ரயில் தாழையூத்து நிலையம் வரையே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி நிலைய பணிமனையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக சனிக்கிழமை (ஜூன் 27) இரவு 8.50 மணிக்கு எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் நெல்லை அதிவிரைவு ரயில் (எண்: 12631) தாழையூத்து நிலையத்திலேயே நிறுத்தப்படும். மறுமாா்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) இரவு 8.50 மணிக்கு திருநெல்வேலி நிலையத்தில் இருந்து புறப்படுவதற்குப் பதிலாக தாழையூத்தில் இருந்து இரவு 9 மணிக்கு அதிவிரைவு ரயில் (எண்: 12632) புறப்பட்டு சென்னை எழும்பூா் நிலையத்துக்கு ஜூன் 29-ஆம் தேதி காலை வந்து சேரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7