tamilnaduepaper
❯ Epaper

வலி

வலி
Join Whatsapp Channel Join Telegram Channel

 

 " அடங்காத சத்தம் ஓயாத அழுகை நிற்கவில்லை ,

 கமலாவின் கணவன் மணிமாறன் ஐம்பது வயதில் உடல் நலம் குன்றி இறந்ததும் புரண்டுப் புரண்டு கண்ணீர் விட்டு அழுது முகம் வீங்கி வீட்டில் முடங்கினாள் கமலா .

 

   பத்து நாட்கள் கடந்தது அன்று மங்களமும் குங்குமமும் தாலியும் கமலாவை விட்டு விலகி வேறு இடம் தேடி குடி புகுந்து கொண்டது .

 

   விதவை என்கிற

புது பெயரும் உரிமை

இழப்பும் பறிப்பும்

 கமலாவை கவ்விக் கொண்டது . இன்று இன்னும் பலமாக அழுது விசும்ப அலறல் சத்தம் கேட்டு மெதுவாக படியேறி வந்தாள் ராகவி .

 

     கமலா வீட்டிற்கு அடுத்த வீடு ராகவி வயது முப்பது கணவன் விபத்தில் இழந்து பத்து ஆண்டு ஆகிறது, கைக் குழந்தையோடு அன்று நின்ற அவள் மெல்ல மெல்ல பள்ளிப் படிப்பை முடிக்க இருக்கும் மகனாக வளர்த்துவிட்டாள் . அவளின் நிலை பரிதாபம் தான் இருந்தும் எதிர் நீச்சல் போட்டு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாள் ராகவி .

 

    " மெல்ல படியேறி வந்தவள் கமலாவை வெளியில் அழைத்து வாசலில் இருந்த காலி நாற்காலி , சாமியானா அனைத்தையும் காட்ட அன்று நிரம்பி உட்கார இடம் இல்லாமல் வழிந்தது .

பத்து நாள் கடந்ததும் உட்கார ஆள் இல்லை தனி மரமாய் அனைத்தும் கிடக்கிறது இது தான் உண்மை என்றாள். நிதி நீர் ஒரு இடத்தில் தேங்குவதில்லை கடலை நோக்கி ஓடும் , நீயும் கவலை, இழப்பு, இதை மறந்து வாழ பழகிக்கொள் என்றாள் .."

 

   கோழை போல அழுவதை நிறுத்தி விட்டு அடுத்து உன் பெண்ணுக்கு தாயாக வழி காட்டியாக , உன் குடும்ப பொறுப்பை ஆண் மகன் போல் ஏற்று நடத்திட மனதை பாறை கல் போல் ஆக்கிவிட்டு நாளைய விடியலை எதிர் கொள்ள தயார் ஆகு , போனது வராது , வராத ஒன்றுக்கு ஒப்பாரி வைத்து அடங்கி முடங்காதே என்றாள் ராகவி .

 

  உன் கணவன் சொத்து எதுவும் வைக்கவில்லை உட்கார்ந்து சாப்பிட , உன் மகளுக்கும் உன் வயிற்றுக்கும் ஆறுதல் சொல்ல கண்ணீரை துடைத்து விட்டு உழைக்க தயாராகு என்று தைரிய வார்த்தைகள் கூறி கமலாவை சகஜ நிலைக்கு கொண்டு வந்தாள் ராகவி .

 

    ஊரார் பாரதி கண்ட புதுமைப் பெண் போல கம்பிரமாய் பார்க்க வீர நடை போட்டு தன் வீட்டுக்குள் புகுந்து தாள் இட்டாள் ராகவி .

 

   " உள் அறைக்குள் சென்று கதவை அடைத்துவிட்டு சத்தம் வராமல் கதறி அழுது கண்ணீர் நதியாய் ஓட மனதால் நினைத்தாள் கணவனை இழந்த வேதனை எத்தனை கொடுமை அதை பத்து ஆண்டுகளாய் அனுபவிக்கும் அவலம் எப்படி பட்டது என்பதை எப்படி கமலாவிடம் சொல்வேன் என்று மனம் உடைந்து தரையில் சரிந்தாள் ராகவி ... "

 

- சீர்காழி. ஆர். சீதாராமன் .

- 9842371679 .

ராசி பலன்

விலகிச் சென்றவர்கள் பற்றிய சிந்தனை உண்டாகும். மனை சார்ந்த உதவிகள் சாதகமாகும். அலுவலகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். உறவினர்கள் வழியில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். வீடு மாற்றம் குறித்த சிந்தனை... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை ஏற்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம்... மேலும் படிக்க

உறவுகள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். கல்விப் பணிகளில் மேன்மை ஏற்படும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். துணைவர் வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான சுப விரயங்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆசைகள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியம் சாதகமாகும். உத்தியோக பணிகளில் சில சூட்சுமங்களை அறிந்து செயல்படுவீர்கள். பிரபலமான... மேலும் படிக்க

எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். ஆரோக்கியத்தில் மந்தமான சூழல் உண்டாகும். மற்றவர்களுக்கு வாக்குறுதி அளிக்கும் பொழுது சூழ்நிலை அறிந்து... மேலும் படிக்க

பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றி பெறும். பழைய நண்பர்களின் அறிமுகம் உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள்... மேலும் படிக்க

நண்பர்கள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். வெளியூரில் இருந்துவந்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் கடினமான பணிகளையும் செய்து முடிப்பீர்கள். நினைத்த காரியங்கள் கைகூடி... மேலும் படிக்க

உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். அக்கம், பக்கம் வீட்டாரின் ஆதரவுகள் பெருகும். குடும்பத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் நெளிவு சுழிவுகளை அறிவீர்கள். பணிபுரியும் இடத்தில் சாதகமான... மேலும் படிக்க

திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். வீடு வாகனங்களை சீர் செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். வியாபார எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். உழைப்புக்கு உண்டான... மேலும் படிக்க

சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். அரசு பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். மாறுபட்ட அணுகுமுறைகளால் மாற்றம் பிறக்கும்.... மேலும் படிக்க

நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். பொருளாதார சிக்கல்கள் குறையும். பணிகளில் அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். தன வரவுகளில் ஏற்ற,... மேலும் படிக்க

விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். நுட்பமான விஷயங்களில் கவனம் வேண்டும். சேமிப்பு குறித்த சிந்தனைகள் மேம்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த தயக்கங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய... மேலும் படிக்க