டிஎன்பிஎஸ்சி வாயிலாக மின் வாரியத்துக்கு 258 உதவி பொறியாளர் தேர்வு

டிஎன்பிஎஸ்சி வாயிலாக மின் வாரியத்துக்கு 258 உதவி பொறியாளர் தேர்வு

சென்னை:

மின் வாரி​யத்​துக்கு டிஎன்​பிஎஸ்சி வாயி​லாக 258 உதவிப் பொறி​யாளர்​கள் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர். தமிழக மின் வாரி​யத்​தில் 50 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட காலிப் பணி​யிடங்​கள் நிரப்​பப்​ப​டா​மல் இருப்​ப​தாக​வும், அதை உடனடி​யாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்​டும் எனவும் மின்​வாரிய தொழிற்​சங்​கங்​கள் வலி​யுறுத்தி வரு​கின்​றன.


இந்​நிலை​யில் கடந்த ஆண்டு மின் வாரி​யத்​துக்கு சிவில், மெக்​கானிகல் மற்​றும் எலெக்​டிரிக்​கல் உதவிப் பொறி​யாளர்​களை தேர்வு செய்ய அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் (டிஎன்​பிஎஸ்​சி) அறி​விப்பு வெளி​யிட்​டது.


நேர்காணல் இல்லை: ஒருங்​கிணைந்த தொழில்​நுட்ப சேவை​கள் தேர்வு மூலம் நேர்​காணல் இல்​லாமல் இந்த பணி​யிடங்​கள் நிரப்​பப்​படும் என அறிவிக்​கப்​பட்​டது. இதற்​கான தேர்​வு​கள் கடந்த அக்​டோபர் மாதம் நடை​பெற்​றது.


இந்​நிலை​யில் 240 எலெக்ட்​ரிக்​கல் உதவிப் பொறி​யாளர்​கள், 30 சிவில் மற்​றும் 24 மெக்​கானிக்​கல் என மொத்​தம் 258 உதவிப் பொறியாளர்​கள் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர்.


தமிழ் வழி கல்வி: இவர்​களில் தமிழ் வழியே படித்​தவர்​கள், மாற்​றுத் திற​னாளி​கள் சலுகை​யில் தேர்வு செய்​யப்​பட்​ட​வர்​களை மட்​டும் சான்​றிதழ் சரி பார்த்த பிறகு பணி​யில் சேர​வும், மற்​றவர்​கள் உடனடி​யாகப் பணி​யில் இணை​ய​வும் மேற்​பார்வை பொறி​யாளர்​கள் நடவடிக்கை எடுக்க வேண்​டும் என மின்​வாரி​யம் அறி​வுறுத்​தி​யுள்​ளது.


மின் வாரி​யத்​தில் மக்​கள் முதலில் அணுகக்​கூடிய அதி​காரி​யாக இருப்​பவர்​கள் உதவிப் பொறி​யாளர்​கள். மின்​சா​ரம் தொடர்​பான பிரச்​சினை​களுக்​குத் தீர்வு காண்​ப​தில் முதல்​நிலை அதி​காரி​கள் உதவிப் பொறி​யாளர்​கள்​தான் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%