60 நாள் காசா போர் நிறுத்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட ஹமாஸ்..!

60 நாள் காசா போர் நிறுத்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட ஹமாஸ்..!

ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக வெற்றிபெறும் வரை காசா மீதான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் தொடர்ந்து கூறி வருகிறது. இதுதான் தங்கள் நாட்டிற்கான ஒரே பாதுகாப்பு என அந்நாட்டு பிரதமர் நேதன்யாகு உறுதிப்பட தெரிவித்து வருகிறார்.


இதற்கிடையே காசா மீதான தாக்குதலில் அங்குள்ள மக்கள், குறிப்பாக குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்து வரும் பரிதாப நிலை நிலவுகிறது. இதனால் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றனர்.


இதற்கிடையே பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக 60 நாள் போர் நிறுத்த பரிந்துரை முன்மொழியப்பட்டது. இந்த பரிந்துரையை ஹமாஸ் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


இஸ்ரேலும் ஒப்புக்கொண்டால், இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான காசா போர் 60 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படும். அப்போது பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். அதற்குப்பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்படலாம்.


2023ஆண்டு ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 250 பேரை பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல் போர் பிரகடனம் செய்து, காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. சுமார் இரண்டு வருட தாக்குதலில் இரண்டு முறை போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%