Print Date: Wednesday, 01 July 2026, 11:33 AM
Published On: 2026-06-26 20:26:53
தமிழக கடலோர பகுதிகளின் வழியாக சுமார் 0.9 கி.மீ உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழ் நாட்டின் 3 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியின் படி,தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெனிசுலா பேரிடர்: 200-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை…! GOLD RATE: தங்கம் விலை சற்றே உயர்வு – இன்றைய நிலவரம் என்ன…? சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் – காவல்துறை அதிகாரிகளுக்கு பதக்கம் அறிவிப்பு…! வாடகைக்கு பணமில்லை… நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றேன் – ‘அப்சஷன்’ பட நடிகை இந்தே நவரெட்…!