குடியுரிமை | பாஸ்போர்ட் இல்லையென்றால் வேறு எது? - மத்திய அரசுக்கு சசி தரூர் கேள்வி!
ஜூன் 24-ம் தேதி இந்தியாவின் 14-வது பாஸ்போர்ட் சேவை தினம் கொண்டாடப்பட்டது. அப்போது, வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், எனவும் இந்திய பாஸ்போர்ட் என்பது ஒரு பயண ஆவணம் மட்டுமே தவிர, அது குடியுரிமைக்கான இறுதி ஆதாரம் அல்ல என்று விளக்கம் அளித்திருந்தது. இதைத்தொடர்ந்து, வெளியுறவுத்துறை இந்த விளக்கத்தால், சாதாரண குடிமக்களுக்கு வீண் பதற்றமும் அச்சமும் ஏற்படும் என்றும், அரசை எதிர்க்கும் தனிநபர்களின் குடியுரிமையைப் பறிக்கவே அரசு இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதன்படி, இது குறித்து கேள்வி எழுப்பியுள்ள, காங்கிரஸின் திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர், ”பாஸ்போர்ட் வழங்குவதற்கு முன் அரசு குடியுரிமை உள்ளிட்ட பல அம்சங்களை சரிபார்க்கிறது. அப்படியிருக்க, அந்தச் சரிபார்ப்புகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டையே குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல என்று கூறுவது தர்க்கரீதியாக முரண்பாடானது. எனவே, பாஸ்போர்ட்டை சட்டப்படி குடியுரிமைக்கான அதிகாரப்பூர்வ சான்றாக அங்கீகரிக்க வேண்டும். பாஸ்போர்ட் உள்நாட்டுக் குடியுரிமையை நிலைநாட்டவில்லை என்றால், வேறு எதுதான் நிலைநாட்டும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இந்தியர் அல்லாதவர்களுக்கும் பாஸ்போர்ட் வழங்கப்படலாம் என்பதால் அது குடியுரிமைக்கான ஆவணமாக எப்போதும் ஏற்றுக்கொள்ளப்பட்டதில்லை என்றும், இது அரசின் புதிய முடிவு அல்ல என்றும் மத்திய பாஜக அரசு கூறியுள்ளது.
News
இந்திய ஏ அணி அதிரடி: துருவ் ஜூரல் அபார சதம், இலங்கைக்கு கடுமையான சவால் விடுத்த இந்திய பந்துவீச்சு!
இலங்கை ஏ அணிக்கு எதிரான முதலாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், இந்திய ஏ அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கேப்டன் துருவ் ஜூரலின் சிறப்பான ஆட்டமிழக்காத சதத்தின் உதவியுடன் இந்திய ஏ அணி தனது முதல் இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 452 ரன்கள் என்ற வலுவான நிலையில் டிக்ளேர் செய்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை ஏ அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது இலங்கை ஏ அணி இந்திய அணியை விட 339 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்திய அணி தரப்பில் அன்ஷுல் கம்போஜ் (1/22) மற்றும் யாஷ் தாக்கூர் (1/20) ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி எதிரணிக்கு ஆரம்பத்திலேயே நெருக்கடி கொடுத்தனர். இலங்கை ஏ அணிக்கு கம்போஜ் சிறப்பான தொடக்கத்தை தடுத்தார். விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் நிரோஷன் டிக்வெல்லாவை 10 ரன்களில் ஷேக் ரஷீத்திடம் கேட்ச் கொடுக்கச் செய்து அவர் வெளியேற்றினார். அதன் பிறகு, பவன்தா வீரசிங்கவை 11 ரன்களில் யாஷ் தாக்கூர் போல்ட் ஆக்கினார். இதனால் இலங்கை ஏ அணி 38 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும், நுவானிடு பெர்னாண்டோ மற்றும் அஷேன் பண்டார ஜோடி பொறுப்புடன் விளையாடி மேலும் விக்கெட்டுகள் விழாமல் தடுத்தது. 103 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்த பெர்னாண்டோவும், 18 ரன்களுடன் அஷேன் பண்டாரவும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு பிரிக்கப்படாத 75 ரன்கள் சேர்த்துள்ளது. முன்னதாக, இந்திய ஏ அணியின் கேப்டன் துருவ் ஜூரல் 215 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 141 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வழிநடத்தினார். தனது பொறுமையான மற்றும் அதிரடியான ஆட்டத்தால் அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார். முதல் நாள் ஆட்டத்தின் போது 68 ரன்களுடன் களத்தில் இருந்த ஜூரல், இரண்டாம் நாளில் அதனை சதமாக மாற்றினார். அவருடன் விளையாடிய ஷேக் ரஷீத், நேற்று எடுத்த 53 ரன்களுடன் இன்று 10 ரன்கள் மட்டுமே சேர்த்து 63 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா ஏ அணி சாய் சுதர்சனின் 132 ரன்கள் பங்களிப்புடன் 4 விக்கெட்டுக்கு 333 ரன்கள் எடுத்திருந்தது. ஆயுஷ் பாண்டே (25), தேவ்தத் படிக்கல் (12) மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் (22) ஆகியோர் தொடக்கத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறினர். இலங்கை ஏ அணி தரப்பில் சாமிக குணசேகரா இரண்டாவது நாளில் மேலும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜூரல் மற்றும் ரஷீத் இடையேயான முக்கிய கூட்டணியை அவர் பிரித்தார். தொடர்ந்து, 30 ரன்கள் எடுத்திருந்த ஹர்ஷ் துபேயையும் குணசேகரா ஆட்டமிழக்கச் செய்தார். ஆட்டமிழப்பதற்கு முன்பு, துபே கேப்டன் ஜூரலுடன் இணைந்து 6-வது விக்கெட்டுக்கு முக்கியமான 86 ரன்கள் சேர்த்தார்.
Sports
IND vs IRE: டி20 வரலாற்றிலேயே பிரசித் கிருஷ்ணா மோசமான சாதனை.. பொளந்த அயர்லாந்து
பெல்ஃபாஸ்ட்: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் பந்துவீச்சாளர்கள் யாரும் விரும்பாத ஒரு மோசமான சாதனையைத் தன்வசப்படுத்தியுள்ளார். அடுத்தடுத்த இரண்டு சர்வதேச டி20 போட்டிகளில் மொத்தம் 125 ரன்களை வாரி வழங்கி, உலக அளவில் இந்த பின்னடைவைச் சந்தித்த முதல் பந்து வீச்சாளர் என்ற சோகமான சாதனையை அவர் பதிவு செய்துள்ளார். அயர்லாந்துக்கு எதிராக பெல்ஃபாஸ்ட்டில் நடைபெற்ற போட்டியில், பிரசித் கிருஷ்ணா விக்கெட் ஏதுமின்றி தனது 4 ஓவர்களில் 57 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதற்கு முன்னதாக, கடந்த 2023-ஆம் ஆண்டு குவஹாட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் விக்கெட் ஏதுமின்றி 4 ஓவர்களில் 68 ரன்களை அவர் வாரிக்கொடுத்திருந்தார். இந்த இரண்டு போட்டிகளின் மூலமாக, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் அதிக ரன்களைக் கொடுத்த பந்து வீச்சாளராக பிரசித் கிருஷ்ணா மாறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பிரசித் கிருஷ்ணா வீசிய 68 ரன்கள் என்பது, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய பந்துவீச்சாளர் ஒருவரால் வீசப்பட்ட மிக மோசமான ஸ்பெல் ஆகும். இதற்கு முன்பு 2018-ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக யுஸ்வேந்திர சஹால் 64 ரன்கள் கொடுத்ததே இந்திய அளவில் மோசமான சாதனையாக இருந்தது. குவஹாட்டி போட்டியின் கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டபோது, கிளென் மேக்ஸ்வெல் இவரது பந்துவீச்சை துவம்சம் செய்து ஆஸ்திரேலியாவுக்கு வெற்றியைத் தேடித்தந்தது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் பிரசித் கிருஷ்ணா, டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ரன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் தொடர்ந்து தடுமாறி வருகிறார். காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள அவருக்கு இந்த தொடர் ரன் குவிப்புகள் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளன. இந்திய அணியில் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் மற்றும் மயங்க் யாதவ் போன்ற இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வரும் சூழலில், டி20 அணியில் தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ள பிரசித் கிருஷ்ணா தனது பந்துவீச்சு நுணுக்கங்களையும், டெத் ஓவர் செயல்பாடுகளையும் உடனடியாக மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். பிரசித் கிருஷ்ணாவின் மோசமான பந்துவீச்சு காரணமாக, இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்துள்ளது.
Sports
இந்தியாவில் பிறந்து அயர்லாந்துக்கு விளையாடும் ஜெய் முன்ட்ரா..முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து அபாரம்
பெல்ஃபாஸ்ட்: இந்தியாவில் பிறந்த அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜெய் முன்ட்ரா, இந்திய அணிக்கு எதிரான தனது டி20 சர்வதேச (T20I) அறிமுகப் போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் மேத்யூ ஹம்ப்ரிஸைத் தொடர்ந்து தனது அறிமுகப் போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த இரண்டாவது அயர்லாந்து பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். தனது முதல் சர்வதேச விக்கெட்டாக சஞ்சு சாம்சனை போல்டாக்கி ஜெய் முன்ட்ரா அசத்தினார். அயர்லாந்து அணிக்காக அறிமுகமான ஜெய் முன்ட்ரா, இந்திய அணிக்கு எதிரான போட்டியில் தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி தனது அறிமுகப் போட்டியை மறக்க முடியாத ஒன்றாக மாற்றியுள்ளார். ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் பந்துவீச வந்த இந்த வலது கை வேகப்பந்து வீச்சாளர், 4 பந்துகளில் 5 ரன்கள் எடுத்திருந்த சஞ்சு சாம்சனை போல்டாக்கி அயர்லாந்து அணிக்கு ஆரம்பக்கால திருப்புமுனையை ஏற்படுத்தித் தந்தார். இதன் மூலம், அயர்லாந்து கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக டி20 போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஜெய் முன்ட்ரா படைத்துள்ளார்.சர்வதேச கிரிக்கெட்டில் தான் வீசிய முதல் பந்திலேயே சஞ்சு சாம்சனை வீழ்த்தி முன்ட்ரா அசத்தினார். ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே மணிக்கு 139 கி.மீ வேகத்தில் வீசப்பட்ட லெந்த் டெலிவரியை சாம்சன் அடிக்க முயன்றார். ஆனால் பேட்டின் உள்பகுதியில் பட்ட பந்து நேராக ஸ்டம்பைத் தாக்கியது. இதனால் சஞ்சு சாம்சன் போல்டாகி வெளியேற, அயர்லாந்து அணிக்கு ஆரம்பத்திலேயே விக்கெட் கிடைத்தது.இதற்கு முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான அயர்லாந்து பந்துவீச்சாளர் மேத்யூ ஹம்ப்ரிஸ், தனது முதல் பந்திலேயே ரிஷாத் ஹொசைனை வீழ்த்தி இந்த சாதனையை முதலில் செய்திருந்தார். அதே ஓவரில் தஸ்கின் அகமதுவையும் வீழ்த்திய அவர், 2 ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே வழங்கி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அந்தப் போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தானில் பிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான ஜெய் முன்ட்ரா, இந்தியாவிற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அயர்லாந்து ஆடவர் கிரிக்கெட் அணியில் முதல்முறையாக சேர்க்கப்பட்டுள்ளார். பஞ்சாப்பைச் சேர்ந்த சிமி சிங்கிற்குப் பிறகு அயர்லாந்து அணிக்காக விளையாடும் இரண்டாவது ஆசிய கிரிக்கெட் வீரர் என்ற சிறப்பை ஜெய் முன்ட்ரா பெறுகிறார். ஜெய்ப்பூரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டோங்க் என்ற சிறிய நகரில் பிறந்த முன்ட்ராவுக்கு, சிறுவயதிலேயே கிரிக்கெட் மீது ஆர்வம் ஏற்பட்டு ஒரு அகாடமியில் சேர்ந்தார். ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சாளராகத் தொடங்கினாலும், தனது 16 வயதில் அவர் ஒரு டாப்-ஆர்டர் பேட்டராகவும், இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும் மாறினார். அயர்லாந்து கிரிக்கெட் தளத்திற்கு அளித்த பேட்டியில், தனது படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் கிரிக்கெட் தற்காலிகமாக பின்னுக்குத் தள்ளப்பட்டதாக முன்ட்ரா தெரிவித்தார். தனது "கிரிக்கெட் பயணம் முடிந்துவிட்டது" என்று நினைத்த அவர், பொழுதுபோக்காக மட்டுமே விளையாடி வந்துள்ளார். கல்லூரி காலத்தில் டென்னிஸ் பந்து மூலம் மீண்டும் மித வேகப்பந்து வீசத் தொடங்கிய அவர், பின்னர் கல்லூரி அணிக்காக மீண்டும் லெதர் பந்து கிரிக்கெட்டிற்குள் நுழைந்தார். பந்தின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியதும், வேகப்பந்து வீசுவதற்கான அவரது ஆர்வம் மீண்டும் உயிர்பெற்றது. 2019 இல் தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு, முன்ட்ரா ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டியிருந்தது. முழுநேர கார்ப்பரேட் வேலைக்குச் சென்று கிரிக்கெட்டை முழுமையாகக் கைவிடுவதற்குப் பதிலாக, விளையாட்டுக்கு மற்றொரு வாய்ப்பை வழங்க அவர் முடிவு செய்தார். அதன்படி, 2021 ஆம் ஆண்டில், தனது 24 ஆவது வயதில், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் துறையில் முதுகலை பட்டம் (Master's degree) பெறுவற்காக அயர்லாந்து சென்றார். அங்கு தனது படிப்பைத் தொடர்ந்துகொண்டே, தனது கிரிக்கெட் கனவையும் வளர்த்துக்கொண்டார்.
Sports
IND vs IRE: கேப்டனாக முதல் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் ஏமாற்றம்..பேட்டிங்கில் காலை வாரிய மக்கள் கேப்டன்
பெல்ஃபாஸ்ட்: அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியின் மூலம், இந்திய அணியின் புதிய டி20 கேப்டனாக களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், முதல் போட்டியிலேயே சோபிக்க தவறினார். தனது புதிய பயணத்தைத் தொடங்கிய நிலையில்,7 பந்துகளில் வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மேலும், சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இந்திய டி20 அணிக்குத் திரும்பியுள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் கடைசியாக 2023 டிசம்பர் 3 அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் விளையாடி, 37 பந்துகளில் 53 ரன்கள் குவித்திருந்தார்.ஐபிஎல் 2026 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர், தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் மீண்டும் தேசிய அணிக்குத் தேர்வாகியுள்ளார். அந்த சீசனில் 13 இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர், 168.81 ஸ்டிரைக் ரேட்டுடன் ஒரு சதம் மற்றும் 5 அரைசதங்கள் உள்பட 498 ரன்கள் குவித்து, பஞ்சாப் அணியின் இரண்டாவது அதிகபட்ச ரன் குவிக்கும் வீரராகத் திகழ்ந்தார். இந்திய அணி 2026 டி20 உலகக் கோப்பையை வென்றதைத் தொடர்ந்து, சூர்யகுமார் யாதவிடம் இருந்து கேப்டன் பொறுப்பை ஸ்ரேயாஸ் ஐயரிடம் ஒப்படைக்க அணி நிர்வாகம் முடிவு செய்தது. தனது 31 வயது 202 நாட்களில் இந்திய டி20 அணியின் கேப்டனாக அறிமுகமாகியுள்ள ஸ்ரேயாஸ் ஐயர், மிக மூத்த வயதில் இந்திய டி20 கேப்டனாக அறிமுகமான 3-வது வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இப்பட்டியலில் ஷிகர் தவான் (35 வயது 232 நாட்கள்) முதலிடத்திலும், சூர்யகுமார் யாதவ் (33 வயது 70 நாட்கள்) இரண்டாவது இடத்திலும் உள்ளனர். அயர்லாந்துக்கு எதிரான இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து அயர்லாந்து அணி தடுமாறியது. ஆனால் அதன் பிறகு விளையாடிய கேப்டன் டக்கர் 36 பந்துகளில் 50 ரன்களும், கெரத் டிலானி 32 பந்துகளில் 49 ரன்களும் எடுக்க, 20 ஓவர் முடிவில் அயர்லாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் அபிஷேக் சர்மா மட்டும் அதிரடியாக விளையாட சாம்சன், இசான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
Sports
டி20 உலக சாம்பியனுக்கு சோகம்.. அயர்லாந்துக்கு எதிராக முதல் முறை இந்திய அணி தோல்வி
பெல்ஃபாஸ்ட்: அயர்லாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 183 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, அயர்லாந்து அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 18.5 ஓவர்களில் 148 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் லோர்கன் டக்கர் சிறப்பாக விளையாடி 50 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கரேத் டெலானி, ஒரு ரன்னில் அரைசத வாய்ப்பை இழந்து 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய அணி தரப்பில் பந்துவீச்சில் ஹர்ஷித் ராணா 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். டி20 போட்டிக்குத் திரும்பிய பிரசித் கிருஷ்ணாவுக்கு இந்த நாள் சிறப்பாக அமையவில்லை. அவர் விக்கெட் ஏதுமின்றி 4 ஓவர்களில் 57 ரன்களைக் கொடுத்தார். 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர். எனினும், மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 19 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். ஆனால், அவர் ஆட்டமிழந்த பிறகு இந்திய அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. நடுவரிசையில் ஷிவம் துபே 14 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஜெய் முந்த்ராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அக்சர் படேல் 14 ரன்களுக்கும், ஹர்ஷித் ராணா 8 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு நழுவியது. அயர்லாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மேத்யூ ஹம்ப்ரிஸ் அற்புதாமாக பந்துவீசி அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் இன்னிங்ஸை முடிவுக்குக் கொண்டுவந்தார். இறுதியில் இந்திய அணி 18.5 ஓவர்களில் 148 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அயர்லாந்து அணி தரப்பில் மேத்யூ ஹம்ப்ரிஸ் 3.5 ஓவர்களில் 38 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், ஜெய் முந்த்ரா 4 ஓவர்களில் 26 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினர். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக அயர்லாந்திடம் இந்தியா தோல்வியை தழுவியது.
Sports
IND vs IRE: நல்லா இருந்த இந்திய அணி.. தோல்விக்கு காரணமே இதுதான்.. கம்பீர், ஸ்ரேயாஸ் மெகா சொதப்பல்கள்
பெல்ஃபாஸ்ட்: அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வரலாறு காணாத அவமானத்தைச் சந்தித்துள்ளது. அண்மையில் டி20 உலகக் கோப்பையை வென்று அசுர பலத்துடன் களம் இறங்கிய இந்திய அணி, அயர்லாந்திடம் முதன்முறையாகத் தோற்றுப் போயிருப்பது ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கம்பீர் எடுத்த அணித் தேர்வு முடிவுகள், ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சி என பலவற்றையும் சுட்டிக் காட்டி கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவற்றை பற்றி பார்க்கலாம். பெல்ஃபாஸ்டில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, கேப்டன் லார்கன் டக்கரின் 50 ரன்கள் மற்றும் காரெத் டெலானியின் அதிரடி 49 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. 183 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, அயர்லாந்தின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறி 18.5 ஓவர்களில் வெறும் 148 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது. எளிய அசோசியேட் அணியான அயர்லாந்திடம் இந்தியா தோற்றதை சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத ரசிகர்கள், சமூக வலைதளங்களில் தங்களது கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சூர்யகுமார் யாதவை நீக்கிவிட்டு, முதல்முறையாக டி20 கேப்டனாகப் பொறுப்பேற்ற ஸ்ரேயாஸ் ஐயரின் முடிவுகள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச்சில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது, மந்தமான பேட்டிங் மற்றும் தவறான வியூகங்கள் என ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்ஷிப் கேள்விக்குறியாகியுள்ளது. உலகக் கோப்பையை வென்று தந்ததுடன், 50 போட்டிகளில் 42 வெற்றிகளைப் பதிவு செய்த சூர்யகுமார் யாதவை அணியிலிருந்து நீக்கியதற்கு இதுதான் பலனா? என்று ரசிகர்கள் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் பிசிசிஐ-ஐ சாடி வருகின்றனர். அயர்லாந்தில் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷியைக் காண மைதானத்தில் கூடுதல் இருக்கைகள் அமைக்கப்படும் அளவுக்கு உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அவரைப் பிளேயிங் லெவனில் சேர்க்காதது அணி நிர்வாகத்தின் பிடிவாதம் மற்றும் பயத்தைக் காட்டுவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மற்றொருபுறம், வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 4 ஓவர்களில் விக்கெட் எதுவும் எடுக்காமல் 57 ரன்களை வாரி வழங்கி ரன் மெஷினாகச் செயல்பட்டது தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. அதேபோல் சம்பந்தமே இல்லாமல் 16வது ஓவரில் அதுவரை பந்து வீசாத வாஷிங்டன் சுந்தரை பந்துவீச அழைத்தார் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர். அந்த ஓவரில் 19 ரன்கள் எடுத்தது அயர்லாந்து. மறுபுறம், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சிவம் துபே மற்றும் திலக் வர்மா ஆகியோரின் மந்தமான பேட்டிங் அணுகுமுறை தோல்வியை உறுதி செய்தது. திலக் வர்மா ஒருநாள் போட்டி போல 21 பந்துகளை சந்தித்து 19 ரன்கள் எடுத்தார். இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம் பெற்று இருக்கும் இந்த புதிய மிடில் ஆர்டர் சுத்தமாக எடுபடவில்லை. தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் தேவையற்ற சோதனைகளும், வெல்லும் கூட்டணியை மாற்றிய பிசிசிஐ தேர்வுக்குழுவின் அரசியலுமே இந்த அவமானத்திற்கு காரணம் என்று சமூக வலைதளங்களில் கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு முன்னதாக, இந்திய அணி தனது தவறுகளைத் திருத்திக் கொண்டு அடுத்த போட்டியில் மீண்டு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Sports
IND Vs IRE: சஞ்சு, ஹர்திக் சாதனையைத் தகர்த்து மாஸ் என்ட்ரி கொடுத்த சிவம் துபே!
பெல்ஃபாஸ்ட்: அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவிய போதிலும், ஆல்-ரவுண்டர் சிவம் துபே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார். டி20 சர்வதேச போட்டிகளில் மிகக் குறைந்த பந்துகளில் 1000 ரன்களைக் கடந்த மூன்றாவது அதிவேக இந்திய பேட்டர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் தனது இடத்தை நிலையானதாக மாற்ற போராடி வரும் துபேவுக்கு இந்த சாதனை ஒரு முக்கிய அங்கீகாரமாக அமைந்துள்ளது. தலா 679 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டியிருந்த நட்சத்திர ஆட்டக்காரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் சாதனையை சிவம் துபே முறியடித்துள்ளார். பெல்ஃபாஸ்ட்டில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், கடைசி நேரத்தில் களம் இறங்கிய துபே 14 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். எனினும், இந்தியாவின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் சொதப்பலால் இப்போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்திடம் அதிர்ச்சித் தோல்வி கண்டது. இதனால் துபேயின் இந்த சாதனை கொண்டாட்டம் சற்று மங்கியுள்ளது. இதனிடையே, டி20 சர்வதேச கிரிக்கெட்டில் மிகக் குறைந்த பந்துகளில் 1000 ரன்களைக் கடந்த இந்திய வீரர்களின் வரிசையில் அபிஷேக் சர்மா 528 பந்துகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் அதிரடி மன்னன் சூர்யகுமார் யாதவ் 573 பந்துகளில் இம்மைல்கல்லை எட்டி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். தற்போது சிவம் துபே 648 பந்துகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள நிலையில், சஞ்சு சாம்சன் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் தலா 679 பந்துகளில் 1000 ரன்களைக் கடந்து அடுத்த இடத்தில் உள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியின் வழிகாட்டுதலில் தனது பேட்டிங் பாணியை மெருகேற்றிக் கொண்ட சிவம் துபே, சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் வல்லவராகத் திகழ்கிறார். இந்திய அணியின் நடுகள வரிசையில் அதிரடி ஆல்-ரவுண்டராக இவர் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை வழங்கி வருவதையே இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. மற்றொருபுறம், இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா இப்போட்டியில் அயர்லாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 11-வது அரைசதத்தை விளாசிய அவர், 250 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஆதிக்கம் செலுத்தி 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளைப் பறக்கவிட்டார். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், அவரது அதிரடி ஆட்டம் இந்திய அணிக்கு சற்று நம்பிக்கையளித்தது. இப்பட்டியலில் அவர் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sports
அயர்லாந்திடம் இந்தியா அதிர்ச்சி தோல்வி: அணியின் பலவீனம் குறித்து மனம்திறந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!
பெல்ஃபாஸ்ட்: அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணிக்கு எதிராக இந்திய பந்துவீச்சாளர்கள் தொடக்கத்தில் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால், கடைசி கட்டத்தில் ரன்களை கட்டுப்படுத்த தவறியதால் அயர்லாந்து அணி வலுவான ஸ்கோரை எட்டியது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி தோல்வியைத் தழுவியது. போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தோல்விக்கான காரணங்களை விளக்கினார். "தொடக்கத்தில் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர். அவர்களுக்கு மைதானத்தில் நல்ல சுவிங் கிடைத்தது. தொடக்கத்திலேயே சில விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனால் எங்களுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. ஆனால், நடுப்பகுதியில் நாங்கள் எங்கள் திட்டங்களைச் சரியாக செயல்படுத்தவில்லை" என்றார். தொடர்ந்து பேசிய அவர், "மைதானத்தின் எல்லைகள் சிறியவை என்று எங்களுக்குத் தெரியும். ஆனால், பந்துவீச்சாளர்கள் பேட்ஸ்மேன்கள் நேராக அடிக்க வாய்ப்பு கொடுத்துவிட்டனர். எனினும், கடைசி ஓவர்களில் அவர்கள் சிறப்பாக பந்துவீசினர். நாங்கள் துரத்த வேண்டிய இலக்கை 140 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இருந்தால் அது மிகவும் நன்றாக இருந்திருக்கும். ஆனாலும், இந்த மைதானத்தில் விளையாடியது எங்களுக்கு ஒரு நல்ல அனுபவம்" என்று கூறினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விளையாடுவதால் இந்தத் தொய்வு ஏற்பட்டதா என்ற கேள்விக்கு ஸ்ரேயாஸ் பதில் அளித்தார். "நிச்சயமாக, நாங்கள் நடந்ததை மறந்துவிட்டு அடுத்த போட்டிக்குத் தயாராக வேண்டும். இந்த ஆட்டத்தில் இருந்து கற்க வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன. அடுத்த போட்டியில் எங்கள் முழு பலத்துடன் களம் இறங்குவோம்" என்று அவர் தெரிவித்தார். ஹர்ஷித் ராணா மற்றும் சிவம் துபே ஆகியோரின் பந்துவீச்சு குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பாராட்டினார். "அவர்களுக்கு தொடக்கத்தில் பிட்ச் சாதகமாக இருந்தது. சிவம் துபே இதற்கு முன்பும் முக்கியமான ஓவர்களை வீசியுள்ளார். நான் அவருடன் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடியுள்ளதால் அவரது பலம் மற்றும் பலவீனங்களை அறிவேன். காயம் ஏற்பட்டு நீண்ட நாட்களுக்குப் பின் வந்து விளையாடும் ஹர்ஷித் ராணா மிகச் சிறப்பாக பந்துவீசினார். இந்த அளவில் தனது திறமையை வெளிப்படுத்தியது அருமையானது" என்றார். நிறைவாக அணி வீரர்களுக்கான தனது செய்தி குறித்து அவர் பேசினார். "எந்த ஒரு போட்டியையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. களத்திற்கு வந்த உடனே போட்டிகளில் வென்றுவிட முடியாது. அதற்கு கடினமாக உழைக்க வேண்டும். தற்போதைய தருணத்தில் கவனம் செலுத்த வேண்டும். எதிரணியை வீழ்த்த வாய்ப்பு கிடைக்கும் போது அதைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். எதையும் மிக எளிதாக நினைக்கக் கூடாது. அடுத்த போட்டியில் சிறப்பாக மீண்டு வருவோம்" என்று ஸ்ரேயாஸ் ஐயர் கூறினார்.
Sports
IND vs IRE: இந்தியா பவுலிங்கை பார்த்து காப்பி அடித்தோம்.. வெற்றி ரகசியத்தை கூறிய அயர்லாந்து கேப்டன்
பெல்ஃபாஸ்ட்: இந்தியா அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. பலம் வாய்ந்த இந்திய அணியை வீழ்த்தி தொடரில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இந்த முதல் போட்டியின் வெற்றி தங்களுக்கு மிகவும் விசேஷமானது என்று அயர்லாந்து அணியின் கேப்டன் லோர்கன் டக்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். குறிப்பாக, டி20 அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு லோர்கன் டக்கர் பெறும் முதல் சர்வதேச வெற்றி இது என்பதால் அவருக்கும் அவரது அணிக்கும் இது ஒரு மறக்க முடியாத தருணமாக அமைந்துள்ளது. வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டக்கர், தங்களின் வியூகங்கள் மைதானத்தில் எவ்வாறு பலன் அளித்தன என்பதை விரிவாகப் பகிர்ந்து கொண்டார். இப்போட்டியின் தொடக்கத்தில் அயர்லாந்து அணி 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து கடும் தடுமாற்றத்தைச் சந்தித்தது. இந்திய அணியின் இளம் பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஜோடி சேர்ந்த கேப்டன் லோர்கன் டக்கர் மற்றும் கரேத் டெலானி கூட்டணி விக்கெட்டுகள் விழுவதைத் தடுத்து, பொறுப்புடன் விளையாடி சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்தது. ஒருபுறம் விக்கெட்டை பாதுகாத்துக் கொண்டே, மறுபுறம் ரன் ரேட்டையும் உயர்த்திய டக்கர், கேப்டனாக முன்னின்று விளையாடி பொறுப்பான அரைசதம் அடித்து அசத்தினார். இந்திய பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்தில் மிகச் சிறந்த லென்த்திலும், ஸ்விங் செய்தும் நெருக்கடி கொடுத்ததாகவும், அதிலிருந்து மீண்டு வர கூடுதல் உழைப்பு தேவைப்பட்டது என்றும் டக்கர் குறிப்பிட்டார். இப்போட்டியில் அறிமுக வீரர்களாக களம் கண்ட அயர்லாந்து அணியின் இரண்டு இளம் வீரர்கள் தங்களது முதல் போட்டியிலேயே மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர் என்று டக்கர் மனதாரப் பாராட்டினார். மேலும், இந்திய பந்துவீச்சாளர்கள் முதல் இன்னிங்ஸில் பந்துவீசிய முறையை மிகவும் உன்னிப்பாக கவனித்ததாகக் குறிப்பிட்ட அவர், அதிலிருந்து தங்களது பந்துவீச்சாளர்கள் பல முக்கிய உத்திகளைக் கற்றுக்கொண்டதாகக் கூறினார். இந்திய அணி வீசிய அதே போன்ற துல்லியமான லைன் மற்றும் லென்த்தில் பந்துவீசி, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அயர்லாந்து பந்துவீச்சாளர்கள் ரன் குவிக்க முடியாமல் கடும் சவாலை ஏற்படுத்தினர்.டி20 கிரிக்கெட்டில் உலக சாம்பியனாக விளங்கும் இந்திய அணியை, தங்களது சொந்த மண்ணில் வைத்து வீழ்த்துவது என்பது எப்போதும் தனித்துவமான மற்றும் பெருமைக்குரிய ஒன்று என்று டக்கர் பெருமிதத்துடன் கூறினார். இக்கட்டான நேரத்திலும் மைதானத்திற்கு வந்து தங்களுக்குத் தொடர்ந்து உற்சாகமளித்த ரசிகர்களின் ஆற்றல் தான் வீரர்களுக்குப் பெரும் உந்துதலாக அமைந்தது என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இந்த வெற்றியின் மூலம் கிடைத்துள்ள உத்வேகத்துடன், அடுத்த போட்டியிலும் இதே போன்ற சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்ற அயர்லாந்து அணி மிகுந்த ஆர்வத்துடனும் தீவிர தயாரிப்புடனும் காத்திருக்கிறது என்று லோர்கன் டக்கர் தனது பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
Sports
தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதியாக ஜனநாயகன் பட தயாரிப்பாளர் நியமனம்! - News7 Tamil
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கே. வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அமைச்சருக்கு இணையான அந்தஸ்தும் அதிகாரமும் கொண்ட இந்த உயர் பதவியின் அதிகாரப்பூர்வக் காலம் ஓராண்டு மட்டுமே என்ற போதிலும், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நீடிக்கும் வரை இப்பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. டெல்லியில் இருந்துகொண்டு தமிழக அரசின் முக்கியக் கோரிக்கைகளை மத்திய அரசிடம் கொண்டு சேர்ப்பதும், மாநிலத்திற்கான நிதி மற்றும் திட்டங்களை மத்திய அரசிடமிருந்து முறைப்படிப் பெற்றுத் தருவதுமே இந்தச் சிறப்புப் பிரதிநிதியின் முதன்மையான மற்றும் முக்கியப் பொறுப்பாகும். தமிழக முதல்வர் விஜய்யின் கடைசி படம் என்று கூறப்பட்ட ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கே.வெங்கட நாராயணா என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த பொறுப்புக்கு தனது படத்தை தயாரித்தவருக்கு விஜய் வழங்கியிருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கம், வெள்ளி விலை! வெனிசுலா நிலநடுக்கம் – 550க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! இரவு 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? “மண்டாடி” படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு!
Entertainment
இரவு 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? - News7 Tamil
கடலோர ஆந்திரப்பிரதேசத்திலிருந்து மத்திய மகாராஷ்டிரா வரை தெலுங்கானா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள், மராத்வாடா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியின் வழியாக சுமார் 3.1 கிமீ முதல் 4.5 உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, சிவகங்கை, நீலகிரி, திருவள்ளூர், விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கம், வெள்ளி விலை! வெனிசுலா நிலநடுக்கம் – 550க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதியாக ஜனநாயகன் பட தயாரிப்பாளர் நியமனம்! “மண்டாடி” படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு!
News
ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கம், வெள்ளி விலை! - News7 Tamil
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. இதனிடையே நேற்று தங்கம் விலை நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,680 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.210 குறைந்து ஒரு கிராம் ரூ.13,140-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதற்கிடையே, இன்று தங்கம் விலை அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,05,760-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,220-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், காலையில் உயர்ந்த தங்கம் விலை, மாலையிலும் 2-வது முறையாக அதிகரித்தது. அதன்படி, மாலையில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் 1,06,400க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,300க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மொத்தமாக இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280ம், கிராமுக்கு 160ம் அதிகரித்துள்ளது. வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளி ஒரு கிராம் ரூ.10 உயர்ந்து ரூ.235-க்கும், கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் உயர்ந்து ஒரு கிலோ 2 லட்சத்து 45 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெனிசுலா நிலநடுக்கம் – 550க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! இரவு 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதியாக ஜனநாயகன் பட தயாரிப்பாளர் நியமனம்! “மண்டாடி” படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு!
News
பாகிஸ்தானில் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..!
பாகிஸ்தானில் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..!Published by:Aishwarya.snews18-tamilLast Updated:Jun 26, 2026 7:38 PM ISTஇந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் ஏற்ற இறக்கங்கள் சகஜம். ஆனால் பாகிஸ்தானில் அதன் விலையைக் கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். + Follow usOn Google1/6 இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவது சகஜம். ஆனால் பாகிஸ்தானில் அதன் விலையைக் கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். சமீபத்தில், இந்து சோனி என்பவரின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர், பாகிஸ்தானில் தங்கம் மற்றும் வெள்ளியின் சமீபத்திய விலைகளைக் குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிட்ட விலையைக் கேட்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனெனில், பாகிஸ்தானில் தங்கம் இந்தியாவை விட மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளது.
News
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் பொது வேட்பாளராக களம் காண்கிறாரா சீமான்? – நாதகவில் இருந்து வந்த அப்டேட் என்ன?
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் பொது வேட்பாளராக களம் காண்கிறாரா சீமான்? – நாதகவில் இருந்து வந்த அப்டேட் என்ன?Published by:Arivazhagan Tnews18-tamilLast Updated:Jun 26, 2026 8:10 PM ISTஅம்பாசமுத்திரம் தொகுதியின் இடைத் தேர்தலில் பொது வேட்பாளராக சீமான் களம் இறங்க இருக்கிறார் என தகவல்கள் வெளியாகின. + Follow usOn Google1/7 தமிழ்நாடு சட்டமன்றத்தில் திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம் உட்பட ஆறு தொகுதிகள் காலியாக உள்ளன. இதற்கான இடைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், அம்பாசமுத்திரம் தொகுதியின் இடைத் தேர்தலில் பொது வேட்பாளராக களம் இறங்க இருக்கிறார் என தகவல்கள் வெளியாகின. ஆனால், இதற்கு நாதக தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
News
வெங்கட நாராயணா நியமனம்; அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்
தமிழே தெரியாதவரை தமிழகத்தின் பிரதிநிதியாக நியமித்த திரு. ஜோசப் விஜய் அரசு! தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் திரு வெங்கட் கே நாராயணா அவர்களை நியமித்திருப்பதின் மூலம் தான் ஒரு நவீன காலத்து கலிகுலா மன்னன் என்பதை நிரூபித்துள்ளார் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள். தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட் நாராயணாவை நியமித்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. தனது திரைப்படத்தைத் தயாரித்தாரெனும் ஒற்றைக்காரணத்திற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசுப்பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்வர்… அஞ்சல் சேமிப்பு வங்கி கணக்கில் மொபைல் எண் இணைப்பு கட்டாயம். ஆதார் அடிப்படையிலான e-KYC, பயோமெட்ரிக் சரிபார்ப்பு முறைகள் அமலாகும். மொபைல் எண் இணைக்காதால் DREAM செயலியில் பரிவர்த்தனைகள் செய்ய முடியாது.
Entertainment
டிஜி20 லீக்: கௌரவ், நிதிஷ் ரெட்டி அதிரடி பார்ட்னர்ஷிப்; வாரங்கலை வீழ்த்தி நல்கொண்டா அபார வெற்றி
ஹைதராபாத்: வாரங்கல் வாரியர்ஸ் அணிக்கு எதிரான டிஜி20 லீக் ஆட்டத்தில் அனுராக் நல்கொண்டா நைட்ஸ் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது. ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் நடத்தும் முதலாவது சீசன் 'டிஜி20' (TG20) தெலங்கானா டி20 பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 10ஆவது லீக் போட்டியில் அனுராக் நல்கொண்டா நைட்ஸ் மற்றும் வாரங்கல் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வாரங்கல் வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்துக் களமிறங்கிய நல்கொண்டா அணியின் தொடக்க வீரர் பிரனவ் சூர்யதேவரா 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கௌரவ் ரெட்டி மற்றும் நிதிஷ் ரெட்டி இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், தங்களது அரைசதங்களையும் பதிவு செய்து மிரட்டினர். இதில் இருவரும் இணைந்து 142 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். அதன்பின் 80 ரன்கள் எடுத்த நிலையில் கௌரவ் ரெட்டி விக்கெட்டை இழக்க, 81 ரன்களில் நிதிஷ் ரெட்டியும் ஆட்டமிழந்தார். இதையடுத்துக் களமிறங்கிய ராகுல் புத்தி 31 ரன்களையும், அர்ஃபஸ் அஹ்மத் 33 ரன்களையும் சேர்த்து சிறப்பான ஃபினிஷிங் கொடுத்தனர். இதன் மூலம் அனுராக் நல்கொண்டா நைட்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்களைக் குவித்தது. வாரங்கல் வாரியர்ஸ் அணி தரப்பில் அப்துல் மாலிக் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து கடினமான இலக்கை நோக்கிப் பின்தொடர்ந்த வாரங்கல் வாரியர்ஸ் அணியில், தொடக்க வீரர்களான ஹர்ஷித் சௌத்ரி 10 ரன்களுக்கும், ரிஷிகேத் சிசோடியா ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த கேப்டன் அமன் ராவ் மற்றும் முருகன் அபிஷேக் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியின் விக்கெட் சரிவைத் தடுத்து நிறுத்தியதுடன், சீரான வேகத்தில் ரன்களையும் உயர்த்தியது. பின்னர் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உட்பட 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அமன் ராவ் ஆட்டமிழக்க, 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உட்பட 44 ரன்களில் முருகன் அபிஷேக்கும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து சோபிக்கத் தவற, வாரங்கல் வாரியர்ஸ் அணி 14 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 168 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நல்கொண்டா அணி தரப்பில் சரனு நிஷாந்த் மற்றும் வருண் கௌட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் மூலம் அனுராக் நல்கொண்டா நைட்ஸ் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வாரங்கல் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அதிரடியாக அரைசதம் விளாசி அசத்திய நல்கொண்டா அணியின் நிதிஷ் ரெட்டி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
Sports
முதல் டி20: இந்தியாவுக்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது அயர்லாந்து
ஹைதராபாத்: இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 183 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. அயர்லாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி இன்று பெல்ஃபாஸ்டில் உள்ள சிவில் சர்வீஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து, அயர்லாந்தை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்குத் டிம் டெக்டர் - ராஸ் அடேர் இணை தொடக்கம் கொடுத்தது. இதில் ராஸ் அடேர் 12 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து ஹாரி டெக்டர் ரன்கள் ஏதுமின்றியும், டிம் டெக்டர் 17 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அடுத்து களமிறங்கிய பெஞ்சமினும் 15 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் இணைந்த கேப்டன் லோர்கன் டக்கர் மற்றும் கரேத் டெலானி இணை அதிரடியாக விளையாடி, அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தியது. அபாரமாக விளையாடி வந்த லோர்கன் டக்கர் தனது அரைசதத்தைப் பதிவு செய்தார். இவர்கள் இருவரும் இணைந்து 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், லோர்கன் டக்கர் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உட்பட 50 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜார்ஜ் டாக்ரெல்லும் தனது பங்கிற்கு 19 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடி அரைசதத்தை நெருங்கிய கரேத் டெலானி 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 49 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். இதன்மூலம் வெறும் ஒரு ரன்னில் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை அவர் தவறவிட்டு பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய அயர்லாந்து வீரர்களும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்கத் தவறினர். இதன் காரணமாக அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்ஸர் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடவுள்ளது.
Sports
ஜாக் காலிஸின் உலக சாதனையைச் சமன் செய்த பென் ஸ்டோக்ஸ்!
ஹைதராபாத்: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 7,000 ரன்கள் மற்றும் 250 விக்கெட்டுகளைக் கடந்த முதல் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் என்ற வரலாற்றுச் சாதனையை பென் ஸ்டோக்ஸ் படைத்துள்ளார். இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, நாட்டிங்ஹாமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணிக்கு டெவான் கான்வே மற்றும் கேப்டன் டாம் லேதம் இணை அபாரமான தொடக்கத்தை வழங்கினர். இப்போட்டியில் இருவரும் தங்களின் சதங்களைப் பதிவு செய்தது மட்டுமின்றி, 150 ரன்களையும் கடந்து அசத்தினர். அதன்பின், இந்த இணை முதல் விக்கெட்டிற்கு 317 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், டாம் லேதம் 151 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து 157 ரன்களில் டெவான் கான்வேவும் ஆட்டமிழக்க, அடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள் பெரிய அளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் அடுத்தடுத்து தடுமாறினர். இதன் காரணமாக, நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 438 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கி விளையாடி வருகிறது. இந்நிலையில், இப்போட்டியின் மூலம் பென் ஸ்டோக்ஸ் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். அந்த வகையில், இப்போட்டியில் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 250ஆவது விக்கெட்டைப் பூர்த்தி செய்தார். இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 7,000 ரன்கள் மற்றும் 250 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதுதவிர, உலக அளவில் தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஜாக் காலிஸுக்குப் பிறகு இத்தகைய அரிய சாதனையைச் செய்யும் இரண்டாவது வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் பென் ஸ்டோக்ஸ் படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்காகக் கடந்த 2013-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான பென் ஸ்டோக்ஸ், இதுவரை 121 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 14 சதங்கள், 37 அரைசதங்கள் உட்பட 7,228 ரன்களையும், பந்துவீச்சில் 250 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். சமீபகாலமாக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் தொடர்ந்து அசத்தி வரும் பென் ஸ்டோக்ஸ், இந்த சாதனை மூலம் தற்கால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.
Sports























