Print Date: Wednesday, 01 July 2026, 11:55 AM


Life Style

முதல்-அமைச்சர் விஜய்க்கு பாராட்டு தெரிவித்த தமிழிசை சவுந்தரராஜன்

Published On: 2026-06-26 20:15:54

News Image

தமிழக முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- பிரதமர் நரேந்திரமோடி யோகா தின கொண்டாட்டங்கள், உடற்பயிற்சி பிரசாரங்கள் மற்றும் பொது விழிப்புணர்வு முயற்சிகளில் இளைஞர்களுடன் தீவிரமாக பங்கேற்று, அவர் எப்போதும் முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார். தலைவர்கள் மக்களுடன் துணை நிற்க வேண்டும் என்ற அவரது நம்பிக்கை, பல சமூக காரணங்களில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்க தூண்டியுள்ளது. சமீபத்தில், நமது பிரதமரை போல, தமிழக முதல்-அமைச்சர் விஜய், சர்வதேச யோகா தினம் நடைபெறும் பொது விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் நேரடியாக பங்கேற்பதும், பெருமளவிலான இளைஞர்களுடன் இன்றைய போதைப்பொருள் ஒழிப்பு மாரத்தானில் இணைந்திருப்பதை காண்பது மனதிற்கு இதமளிப்பதாகவும் பாராட்டத்தக்கதாகவும் உள்ளது. தலைவர்கள் மக்களுடன் நடக்கும்போதும், ஓடும்போதும், துணை நிற்கும்போதும், விழிப்புணர்வு ஒவ்வொரு வீட்டையும் சென்றடைகிறது. போதைப்பொருளுக்கு எதிரான போராட்டம் அரசியலுக்கு அப்பாற்பட்டது. போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டிற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.