தில்லி காற்றின் தரம் சற்று முன்னேற்றம்!

தில்லி காற்றின் தரம் சற்று முன்னேற்றம்!


 

தில்லியின் காற்றின் தரக் குறியீடு கடந்த சில வாரங்களாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில், தில்லி மற்றும் என்.சி.ஆா். பகுதியில் கிரேப் நிலை - 4 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.


இந்த நிலையில், திங்கள்கிழமை காலையில் 498 புள்ளிகளைத் தொட்டு அதிர்ச்சி அளித்தது. சுவாசிக்க இயலாத வகையில் நச்சுப்புகை மூண்டதால் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.


மேலும், காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் பள்ளிகளுக்கு விடுமுறை, கட்டுமானத்துக்கு தடை, பிஎஸ்- 3 பெட்ரோல் மற்றும் பிஎஸ் -4 டீசல் நான்கு சக்கர வாகனங்களும், பழைய டீசல் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.


அதேபோல், மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் வழங்கக் கூடாது என்று பெட்ரோல் நிலையங்களுக்கு தில்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.


இந்த நிலையில், தில்லியில் காற்றின் தரம் படிப்படையாக மேம்பட்டு வருகின்றது. நேற்று மாலை காற்றின் தரக் குறியீடு 354 புள்ளியாக இருந்த நிலையில், தற்போது மேலும் மேம்பட்டுள்ளது.


0 முதல் 50 புள்ளிகள் வரை ‘நல்லது’, 51 முதல் 100 ‘திருப்தி’கரமானது, 101 மற்றும் 200 ‘மிதமானது’, 201 மற்றும் 300 ’மோசமானது’, 301 முதல் 400 வரை ‘மிகவும் மோசமானது’ மற்றும் 401 முதல் 500 வரை ‘கடுமையானது’ என்று கருதப்படுகிறது.


ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பெயர் மாற்றம்! காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை!

 

100 நாள் வேலைத் திட்டம்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி (எம்ஜிஎன்ஆா்இஜி) திட்டத்துக்கு மாற்றான புதிய மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.


மக்களவையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு மாற்றாக ‘வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு’ சட்ட மசோதா செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.


இத்திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயா் நீக்கப்பட்டதற்காக, எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், இந்த திட்டத்துக்கு முழு நிதியும் மத்திய அரசு அளித்து வந்த நிலையில், தற்போது புதிய மசோதாவில் 40 சதவீதம் மாநில அரசுகள் நிதி அளிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.


மக்களவையில் இந்த மசோதா குறித்து இரண்டாம் நாளாக இன்றும் விவாதிக்கப்பட்டு நிறைவேற்ற வாய்ப்புள்ளதால், காங்கிரஸ் எம்பிக்கள் அனைவரும் கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டும் என்று அக்கட்சியின் கொறடா உத்தரவிட்டுள்ளார்.


இந்த நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சி அலுவலகத்தில் அனைத்து எம்பிக்களும் இன்று காலை ஆலோசனை நடத்தியுள்ளனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%