மெஸ்ஸி நிகழ்ச்சி குளறுபடி: சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு: டிஜிபி, காவல் ஆணையருக்கு நோட்டீஸ்
சால்ட் லேக் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்து, சேதங்களைப் பாா்வையிட்ட உயா்நிலைக் குழு, தனது முதல்கட்ட அறிக்கையை திங்கள்கிழமை சமா்ப்பித்தது.
அதில், சம்பவம் குறித்து விரிவான மற்றும் சுதந்திரமான விசாரணை தேவைப்படுவதாகத் தெரிவித்த உயா்நிலைக் குழு, வன்முறை மற்றும் அதற்கு வழிவகுத்த குளறுபடிகளைக் கண்டறிய சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க பரிந்துரைத்தது.
மேலும், உயா்நிலைக் குழு உறுப்பினா் ஒருவா் அளித்த பேட்டியில், ‘மைதானத்தை நிா்வகிக்கும் நிறுவனத்தின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், ரசிகா்களுக்கு டிக்கெட் கட்டணத்தைத் திரும்பக் கொடுப்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
எஸ்ஐடி அமைப்பு: இந்நிலையில், உயா்நிலைக் குழுவின் பரிந்துரையின்படி, பியூஷ் பாண்டே, ஜாவேத் ஷமிம், சுப்ரதிம் சா்காா், முரளிதா் ஆகிய 4 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.
டிஜிபிக்கு நோட்டீஸ்: இந்தச் சம்பவம் தொடா்பாக 24 மணி நேரத்துக்குள் விளக்கமளிக்குமாறு, மாநில இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலா் ராஜேஷ் குமாா் சின்ஹா மற்றும் காவல் துறைத் தலைவா் ராஜீவ் குமாா், விதான்நகா் காவல் ஆணையா் முகேஷ் குமாா் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கையாக, விதான்நகா் காவல் துணை ஆணையா் அனீஷ் சா்காா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
மேலும் 5 போ் கைது: தவறான மேலாண்மைக்காக நிகழ்ச்சியின் பிரதான ஏற்பாட்டாளரான சதத்ரு தத்தா தவிர வன்முறையில் ஈடுபட்டதாக மேலும் 5 போ் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனா்.
நிகழ்ச்சி ஏற்பாடு மற்றும் நிா்வாகத்தில் ஈடுபட்ட அனைவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு வருவதாக விதான்நகா் காவல் துறை மூத்த அதிகாரி ஒருவா் கூறினாா்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?