tamilnaduepaper
❯ Epaper

அம்மா

அம்மா
Join Whatsapp Channel Join Telegram Channel

 

               "லலிதா! ராதிகா பேசினாள். அடுத்த வாரம் ராமி ஆஃபிஸ் வேலையா பதினைந்து நாள்கள் ஹைதிராபாத் வருகிறான். வார இறுதியில் நம்மைப் பார்க்க பெங்களூர் வருகிறானாம்" கோவிலிருந்து வந்த லலிதாவிடம் மகா தேவன் சொன்னார்

                   "ஏன் அவன் உங்களிடம் பேசலை? நேற்று கூட ஏதோ மெசேஜ் போட்டிருந்தான். இது பற்றி ஒண்ணும் சொல்லலியே" என்று கேட்டாள் , லலிதா.

                 " அதுவா இப்ப முக்கியம்? இரண்டு நாள் இங்கே நம்முடன் இருக்கப் போகிறான். அதை நினைத்து சந்தோஷப்படு" என்று முடித்துக் கொண்டார் , மகாதேவன்

               " அவியலுக்கு காய் வாங்கிண்டு வாங்கோ. அவனுக்கு மலபார் அவியலும் முருங்கைக்காய் வத்தக்குழம்பும்; மைசூர் ரசமும் ரொம்ப பிடிக்கும். ஒரு கரண்டி பாயசம் பண்ணவா" என்று கேட்டாள் லலிதா.

                  " இரு அவசரப்படாதே! அவன் என்ன ப்ரோக்ராம் போட்டுண்டு வருகிறான்னு தெரியலை. பார்க்கலாம்" என்று பதிலளித்தார் மகாதேவன்

                     ஒரு வாரம் ஓடியது. வெள்ளிக்கிழமை மாலை ஏர்போர்ட்டிலிருந்து ராமி பேசினான்" என் ஃப்ளைட் பங்களூருக்கு வர இரவு பதினோரு மணி ஆகிவிடும். உங்களை நான் தொந்தரவு படுத்த விரும்பவில்லை.ராதிகா வீட்டுக்குப் போய் தூங்கறேன். காலையில் பார்க்கலாம் " என்றான்.

 லலிதா ஏதும் சொல்வதற்குள் மகாதேவன் , ஓகே! ஓகே! என்று சொல்லி ஃபோனை வைத்துவிட்டார். 

                       மறுநாள் காலை விரைவாக எழுந்திருந்து சமையலில் ஈடுபட்டாள், லலிதா. 

            மகாதேவன் இரண்டு தெரு தள்ளியிருக்கும் ராதிகா வீடு போய் ராமியைப் பார்த்து வந்தார்." இப்போதுதான் எழுந்திருக்கிறார்கள். காஃபி சாப்பிட்டு ராதிகா, மாப்பிள்ளை கார்த்திக்குடன் வருகிறேன் என்று சொன்னான்." என்றார்

              மணி பத்தாயிற்று " வா! நாம் சாப்பிடலாமா? அவர்கள் வரும்போது வரட்டும். நீயும் சாப்பிட்டு மாத்திரை போட்டு சிறிது ஓய்வெடு. காலையில் சீக்கிரம் எழுந்து விட்டாய்" என்றார், கரிசனத்துடன். லலிதாவுக்கும் அயர்வாய் இருந்ததினால் சாப்பிட்டு உறங்கப் போனாள்

                    சட் என்று ஃபோன் பெல் சிணுங்கியதில் விழித்துக் கொண்டாள். " இல்லை. நாங்கள் சாப்பிட்டு விட்டோம்.ஓகே ஓகே! "என்பது காதில் விழுந்தது. 

                   அவர்கள் காலை உணவு வெளியே ஆர்டர் பண்ணி சாப்பிட்டார்களாம். இன்று மதியம் கார்த்திக் வீட்டில் சாப்பிட கூப்பிட்டு இருக்கிறார்கள். நம்மையும் வரச்சொல்லி கார்த்திக் அப்பாவும் கார்த்திக்கும் பேசினார்கள். இப்போது அவர்கள் இங்கு நம்மை பார்க்க வருகிறார்கள்" என்றதும், லலிதாவுக்கு வருத்தம் மேலிட்டது. கண்ணில் நீர் கட்டியது."நான்தான் அன்றே சொன்னேனே; அவசரப்படாதே; என்று" சொல்வதைப் போல் லலிதாவை ஒரு பார்வை பார்த்தார்; மகா தேவன்.

                   காஃபியாவது சாப்பிட்டும்; என்று யோசித்தபடி டிகாஷன் தயார் செய்ய போகும் நேரம் அழைப்பு மணி வாசலில் இருந்து வந்தது. ஓடிப்போய் கதவை திறந்தவள், ராதிகாவுடன் வந்த ராமியைக் கண்டதும் " வாடா! வா ! வா! " என்று உற்சாகமாக பேச ஆரம்பித்தாள். அவளுடைய முந்தின நிமிட வருத்தம் போயே போய்விட்டது. மகாதேவன் திகைப்புடன் அவளைப் பார்த்தார். அதுதான் அம்மாவின் மனம்... எப்போதும், அரவணைக்கத் தயாராய்.

 

சசிகலா விஸ்வநாதன்

ராசி பலன்

வியாபாரப் பணிகளில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். கடன் செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். தற்பெருமையான பேச்சுக்களை தவிர்க்கவும். கால்நடை செயல்களில் சற்று கவனம் வேண்டும். தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். சிந்தனைப்... மேலும் படிக்க

கணவன், மனைவிக்கிடையே வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வியாபாரத்தில் நயமான பேச்சுக்கள் நன்மையை தரும். சில நிகழ்வுகளால் மனதளவில் மாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் பனிப்போர்கள் தோன்றி மறையும். செயல்பாடுகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். திறமைக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். செல்வச் சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் கைகூடும். இணையம் துறைகளில்... மேலும் படிக்க

தந்தை வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். விளையாட்டுப் போட்டிகளில் விவேகம் வேண்டும். வீடு வாகனங்களை சீர் செய்வீர்கள். தகவல் தொடர்பு துறைகளில் புதுவிதமான சூழல் ஏற்படும். வியாபார இடமாற்றம் குறித்த சிந்தனை உண்டாகும். பயணம்... மேலும் படிக்க

கணவன், மனைவிக்கு இடையே இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த உதவிகள் சாதகமாகும். புதியவர்களின் நட்பின் மூலம் உற்சாகம் ஏற்படும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் கணிசமான உயர்வு ஏற்படும். மனதளவில் தெளிவும்,... மேலும் படிக்க

வியாபார பணிகளில் பயனற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். உடன் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்துகொள்ளவும். உடலில் ஒருவிதமான சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும். அரசு பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். பயண செயல்களில் சில மாற்றம் ஏற்படும். மனதிலிருக்கும் கருத்துக்களை... மேலும் படிக்க

காணாமல் போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். பிறமொழி மக்களின் அறிமுகம் கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை உணருவீர்கள். போட்டி தொடர்பான செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். நெருக்கமானவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். சஞ்சலமான சிந்தனைகள்... மேலும் படிக்க

விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் புதுமையான சூழல் ஏற்படும். வாகனத்தில் உள்ள பழுதுகளை சீர் செய்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். வீடு மாற்றுவது தொடர்பான எண்ணங்கள் ஏற்படலாம். சக... மேலும் படிக்க

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். மனதில் புதுமையான சிந்தனைகள் மேம்படும். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ஆன்மிகம் தொடர்பான புரிதல்கள் மேம்படும். நுண் கலை... மேலும் படிக்க

தாய் வழி உறவுகள் இடத்தில் மதிப்புகள் உண்டாகும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கலகலப்பான பேச்சுகளால் நட்பு வட்டம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். வாகன மாற்றம்... மேலும் படிக்க

கடினமான விஷயங்களை சாதாரணமாக முடிப்பீர்கள். குழந்தைகளால் மதிப்புகள் மேம்படும். பூர்வீக பிரச்சனைகளுக்கு தீர்வுகள் உண்டாகும். உடன் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நிலுவையில் இருந்துவந்த பழைய சரக்குகள் விற்பனை ஆகும். திட்டமிட்ட காரியம் கைகூடி வரும்.... மேலும் படிக்க

கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்துவீர்கள். சுபகாரிய செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். வியாபாரத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நபர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். உத்தியோகத்தில் மறைமுகமான தடைகள் தோன்றி... மேலும் படிக்க