மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து: ‘சி’ பிரிவில் இடம் பெற்றது இந்திய அணி
Aug 01 2025
26

புதுடெல்லி:
ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் மகளிருக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடர் வரும் 2026-ம் ஆண்டு மார்ச் 1 முதல் 21-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. 12 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடருக்கான ‘டிரா’ நிகழ்வு நேற்று சிட்னியில் நடைபெற்றது. தொடரில் பங்கேற்கும் 12 அணிகளும் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
இந்திய மகளிர் அணி ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் முன்னாள் சாம்பியன்களான ஜப்பான், சீன தைபே மற்றும் வியட்நாம் அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் மார்ச் 4-ம் தேதி வியட்நாமுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் பெர்த் மைதானத்தில் நடைபெறுகிறது. தொடர்ந்து 7-ம் தேதி ஜப்பானுடனும், 10-ம் தேதி சீன தைபேவுடனும் மோதுகிறது. இந்த இரு ஆட்டங்களும் சிட்னியில் நடைபெறுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகளும் 3-வது இடத்தை பிடிக்கும் சிறந்த அணிகளில் இரண்டும் என மொத்தம் 8 அணிகள் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறும்.
அரை இறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் 2027-ம் ஆண்டு பிரேசில் நாட்டில் நடைபெற உள்ளஃ பிபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெறும். அதேவேளையில் கால் இறுதியில் தோல்வி அடையும் 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றில் மோதும். இதில் 2 அணிகள் உலகக் கோப்பை தொடருக்கு தேர்வாகும்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?