
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்காவின் பொருளாதரத்தை உயர்த்துவதாக கூறி மற்ற நாடுகள் மீது வரி விதிப்பு நடவடிக்கையில் அதிபர் டிரம்ப் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதற்கு பல நாடுகளிடம் இருந்து கண்டனங்களும் எழுந்தன.
இந்த நிலையில், உலகின் முன்னணி சிப் உற்பத்தியாளரான இன்டெல், அமெரிக்க அரசாங்கத்திற்கு அதன் வணிகத்தில் 10 சதவீத பங்குகளை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக அந்த நிறுவனமும், அதிபர் டிரம்பும் தெரிவித்துள்ளனர்.
ஜோ பைடன் அதிபராக இருந்தபோது வழங்கப்பட்ட பெரிய மானியங்களுக்கு ஈடாக இன்டெல் நிறுவனம் வாஷிங்டனுக்கு ஒரு பங்கு பங்கை வழங்க வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் கூறியதை அடுத்து இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்க அரசாங்கம் 433.3 மில்லியன் பொதுவான பங்குகளைப் பெறும். இது இன்டெல் நிறுவனத்தில் 9.9 சதவீத பங்குகள் ஆகும். இது குறித்து இன்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒப்பந்தம் தொடர்பான விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது.
இதன்மூலம் இன்டெலின் மிகப்பெரிய பங்குதாரராக அமெரிக்க அரசு மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?