உலக மனிதநேய தினம் 2025

உலக மனிதநேய தினம் 2025


உலக மனிதாபிமான தினம் என்பது துன்பகரமான மக்களுக்கு உயிர்காக்கும் உதவி மற்றும் பாதுகாப்பை வழங்கும் கடமையை நிறைவேற்றிய மனிதாபிமான உதவியாளர்களை கௌரவிக்கிறது. இந்த நாள் 2009 ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச் சபையால் அதிகாரப்பூர்வமாக உலக மனிதாபிமான தினமாக அறிவிக்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டு ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள கால்வாய் ஹோட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் தலைமை மனிதாபிமானி செர்ஜியோ வியேரா டி மெல்லோ மற்றும் அவரது பணியில் இருந்த 21 உறுப்பினர்கள் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில் இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் நினைவுக்கூறப்படுகிறது. 


ஒவ்வொரு ஆண்டும், உலக மனிதாபிமான தினம் பல்வேறு கருப்பொருள்களுடன் கொண்டாடப்படுகிறது. மனிதாபிமானப் பணியாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உலகெங்கிலும் உள்ள மக்களை ஒன்றிணைப்பதே இந்த கருப்பொருளின் முக்கிய நோக்கமாகும். மேலும், நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வு மற்றும் கண்ணியத்தை மேம்படுத்துவதிலும் இது கவனம் செலுத்துகிறது. 


2025 ஆம் ஆண்டு உலக மனிதாபிமான தினத்திற்கான கருப்பொருள்:


"உலகளாவிய ஒற்றுமையை வலுப்படுத்துதல் மற்றும் உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துதல்" என்பதாகும்.



தொகுப்பு: பா. சீனிவாசன், செயலாளர், இந்தியன் ரெட் கிராஸ் சங்கம்,வந்தவாசி கிளை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%