🔥🔥
ஓங்கார மண்டலத்தின் இடையே,
செஞ்சடை விரிந்தாட;
கங்கை புனல் வழிந்தோட;
தோடுடை செவியன்
குண்டலங்கள் குதித்தாட;
மானோடு மழுவாட
நாகம் படமெடுத்தாட;
டமருகம் ஜதிபோட;
பொன் கொன்றை மாலை அசைந்தாட;
வீசிய கரங்கள்
திசையெங்கும் தொட்டாட;
மகாரத்தில் ஊன்றிய பாதம்
கருத்தில் நிற்க;
தூக்கிய குஞ்சித பாத தண்டையாட,
மருண்ட முயலகன் கண்கள் வெருண்டோட;
விண்டறிய விண்ணவர் கோமான்;
தண் நிழல் மனம் புகுந்தது இன்று.
சசிகலா விஸ்வநாதன்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%