ஆப்கன் மீது பாகிஸ்தான் தாக்குதல்: கிரிக்கெட் வீரர்கள் மூவர் உட்பட 8 பேர் உயிரிழப்பு

ஆப்கன் மீது பாகிஸ்தான் தாக்குதல்: கிரிக்கெட் வீரர்கள் மூவர் உட்பட 8 பேர் உயிரிழப்பு



காபூல்: ஆப்​கானிஸ்​தானில் பாகிஸ்​தான் ராணுவம் நேற்று முன்​தினம் நடத்​திய வான்​வழி தாக்​குதலில் ஆப்​கானிஸ்​தான் கிரிக்​கெட் வீரர்​கள் 3 பேர் உட்பட 8 பேர் உயி​ரிழந்​தனர்.


ஆப்​கானிஸ்​தானில் பாகிஸ்​தான் எல்​லையை ஒட்டி பாக்​டிகா மாகாணம் அமைந்​துள்​ளது. இந்த மாகாணத்​தின் உர்​குன் மற்​றும் பார்​மல் மாவட்​டங்​களில் பாகிஸ்​தான் ராணுவம் நேற்று முன்​தினம் மாலை​யில் வான்​வழி தாக்​குதல் நடத்​தி​யது. மக்​கள் குடி​யிருப்பு பகு​தி​கள் மீது இந்த தாக்​குதல் நடத்​தப்​பட்​ட​தாக ஆப்​கன் ஊடகங்​கள் தெரிவிக்​கின்​றன.


இந்​நிலை​யில் இந்த தாக்​குதலில் 3 கிரிக்​கெட் வீரர்​கள் உட்பட 8 பேர் உயி​ரிழந்​த​தாக ஆப்​கானிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யம் (ஏசிபி) தெரி​வித்​துள்​ளது.


இதுகுறித்து ஏசிபி வெளியிட்ட அறிக்கையில், “நட்​பு ரீ​தியி​லான ஒரு ஆட்​டத்​தில் பங்​கேற்க எங்​கள் கிரிக்​கெட் வீரர்​கள் பாகிஸ்​தான் எல்​லைக்கு அரு​கில் உள்ள உர்​குனில் இருந்து ஷரா​னா​வுக்கு சென்​றனர். அவர்​கள் மீண்​டும் உர்​குன் திரும்​பிய பிறகு அவர்​கள் குறி​வைத்து தாக்​கப்​பட்​டனர். இதில் கபீர், சிப்​கதுல்​லா, ஹாரூன் ஆகிய 3 வீரர்​கள் உட்பட 8 பேர் உயி​ரி ழந்​தனர். பாகிஸ்​தானின் இந்த தாக்​குதல் கோழைத்​தன​மானது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%