ஆப்கன் மீது பாகிஸ்தான் தாக்குதல்: கிரிக்கெட் வீரர்கள் மூவர் உட்பட 8 பேர் உயிரிழப்பு
Oct 20 2025
12

காபூல்: ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று முன்தினம் நடத்திய வான்வழி தாக்குதலில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி பாக்டிகா மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் உர்குன் மற்றும் பார்மல் மாவட்டங்களில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று முன்தினம் மாலையில் வான்வழி தாக்குதல் நடத்தியது. மக்கள் குடியிருப்பு பகுதிகள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆப்கன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இந்த தாக்குதலில் 3 கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ஏசிபி) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஏசிபி வெளியிட்ட அறிக்கையில், “நட்பு ரீதியிலான ஒரு ஆட்டத்தில் பங்கேற்க எங்கள் கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள உர்குனில் இருந்து ஷரானாவுக்கு சென்றனர். அவர்கள் மீண்டும் உர்குன் திரும்பிய பிறகு அவர்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர். இதில் கபீர், சிப்கதுல்லா, ஹாரூன் ஆகிய 3 வீரர்கள் உட்பட 8 பேர் உயிரி ழந்தனர். பாகிஸ்தானின் இந்த தாக்குதல் கோழைத்தனமானது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?