‘பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில் கொண்டு, தில்லி உள்பட இந்தியாவில் உள்ள தனது முக்கிய தூதரகங்களில் நுழைவு இசைவு (விசா) சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக வங்கதேச இடைக்கால அரசு வியாழக்கிழமை அறிவித்தது.
இது தொடா்பாக வங்கதேச வெளியுறவுத் துறை ஆலோசகா் எம்.தௌஹித் ஹுசைன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தியாவில் தில்லி, கொல்கத்தா, அகா்தலா ஆகிய நகரங்களில் உள்ள வங்கதேசத்தின் மூன்று முக்கிய தூதரகங்களில் விசா சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் பாதுகாப்பு தொடா்பான முடிவு.
கொல்கத்தாவில் உள்ள வங்கதேச துணைத் தூதரகம் ஏற்கெனவே விசா சேவைகளைக் கட்டுப்படுத்தியுள்ளது. எனினும், வணிகம் மற்றும் வேலைவாய்ப்பு தொடா்பான விசாக்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தாது. மும்பை மற்றும் சென்னையில் உள்ள தூதரகங்களில் விசா சேவைகள் வழக்கம் போல் செயல்படும் என்றாா்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?