இன்றைய சூழ்நிலையில்

இன்றைய சூழ்நிலையில்


வீரம் என்பது

பயப்படாத மாதிரி

நடிக்கிறது; 


புத்திசாலி என்பது

அடுத்தவனை

முட்டாளாக்குவது; 


சந்தோஷம் என்பது

பணம் இருப்பதாய்

காட்டிக் கொள்வது; 


அமைதி என்பது

அடுத்து என்ன பேசனும்னு

தெரியாமலிருப்பது; 


குற்றம் என்பது

அடுத்தவர் செய்யும்போது

தெரிவது; 


தன்னிலை விளக்கம் என்பது

தன் தவறுக்கு சால்ஜாப்பு

சொல்வது; 


பொதுசனம் என்பது

கூடி நின்று வேடிக்கை

பார்ப்பது; 


தானம் என்பது

வீட்டில் உள்ள பழையதை

கொடுப்பது; 


பணிவு என்பது

மரியாதை இருப்பதுபோல்

நடிப்பது; 


காதல் என்பது

இரண்டு பேரும் சேர்ந்து

பொய் சொல்வது; 


கல்வி என்பது

காப்பி பேஸ்ட் செய்வது; 


நேர்மை என்பது

நூறை திருப்பிக் கொடுத்து

இருநூறாய் கேட்பது; 


நல்லவன் என்பது

கஷ்டப்பட்டு நடிப்பது; 


எதார்த்தம் என்பது

நெல்லை விற்றுவிட்டு

அரிசி வாங்கிக் கொள்வது; 


மனிதம் என்பது

இன்னமும் கண்டு

பிடிக்க முடியாதது; 


சிரிப்பு என்பது

அடுத்தவன் விழும்போது

வருவது;



*🌹✍️முத்து ஆனந்த்

வேலூர் - 632 002*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%