
பயனர்கள் தங்கள் பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி போன்ற முக்கிய தனிப்பட்ட விவரங்களை தங்கள் ஸ்மார்ட்போன்களிலிருந்தே புதுப்பிக்க உதவும் ஒரு புதிய ஆதார் மொபைல் செயலி உருவாக்கப்பட்டு வருகிறது. ஆதார் விவரங்களில் ஏதேனும் திருத்தம் இருந்தால் அதை அப்டேட் செய்ய தற்போது ஆதார் சேவை மையம் அல்லது இ சேவை மையம் மூலமாகவும், ஆன்லைன் வழியாகவும் மேற்கொள்ள முடியும். இந்நிலையில், ஒன்றிய அரசு, ஆதார் பயனர்களுக்காக ஒரு மொபைல் செயலியை உருவாக்கி வருகிறது. இந்த மொபைல் செயலியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) உருவாக்கி வருகிறது. இந்த செயலி மூலமாக ஆதார் பயனர்கள், தங்களின் முகவரி உள்ளிட்ட விவரங்களை அப்டேட் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI), முக அடையாளம் (Face ID) தொழில்நுட்பங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், டிஜிட்டல் முறையில் ஆவணங்களைச் சரிபார்ப்பதன் மூலம், அடையாள மோசடிகள் பெருமளவில் குறையும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த மொபைல் செயலி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?