உலக தடகள சாம்பியன்ஷிப்: நீரஜ் சோப்ரா ஏமாற்றம்.. பதக்கத்தை தவறவிட்ட சச்சின் யாதவ்

உலக தடகள சாம்பியன்ஷிப்: நீரஜ் சோப்ரா ஏமாற்றம்.. பதக்கத்தை தவறவிட்ட சச்சின் யாதவ்

டோக்கியோ:


20-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் நடப்பு சாம்பியன் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.


நீரஜ் சோப்ரா ஒலிம்பிக் போட்டிகளில் 2021-ம் ஆண்டு (டோக்கியோ ஒலிம்பிக்ஸ்) தங்கப் பதக்கமும், 2024-ம் ஆண்டு (பாரிஸ் ஒலிம்பிக்ஸ்) வெள்ளிப் பதக்கமும் வென்றிருந்தார். உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 2022-ல் வெள்ளியும், 2023-ல் தங்கமும் வென்றிருந்தார். இதனால் அவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.


இந்த இறுதிப்போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான அர்ஷத் நதீம் (பாகிஸ்தான்) உலகின் முதல் நிலை வீரரான ஜூலியன் வெப்பர் (ஜெர்மனி), ஆண்டர்சன் பீட்டர்ஸ் (கிரேனடா), ஜேக்கப் வட்லெஜ் (செக்குடியரசு) ஜூலியஸ் (கென்யா) ஆகியோர் நீரஜ் சோப்ராவுக்கு கடும் போட்டியாளர்களாக இருந்தார்கள்.


இறுதிப்போட்டி 6 த்ரோ முறையில் நடைபெற்றது. இதில் முதல் 3 த்ரோ முடிவில் இந்தியாவின் சச்சின் யாதவ் 86.27 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் இருந்தார். இதுவே இவரது சிறப்பான த்ரோ ஆகும். மற்றொரு இந்திய வீரரான நீரஜ் சோப்ரா யாரும் எதிர்பார்க்காத வகையில் 8-வது இடத்தில் இருந்தார். முதல் 3 இடங்களில் வால்காட் 87.83, பீட்டர்ஸ் 87.38, தாம்சன் 86.6 ஆகியோர் இருந்தார்.


இதனை தொடர்ந்து நடந்து மீதமுள்ள 3 த்ரோ வீசப்பட்டது. இதன் முடிவில் வால்காட் (டிரினிடாடியன்) 88.16 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார். இந்த த்ரோ இந்த சீசனின் சிறந்த த்ரோ ஆகும். பீட்டர்ஸ் (கிரேனடா) 87.38 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை வென்றார். தாம்சன் (அமெரிக்கா) 86.67 புள்ளிகள் பெற்று வெண்கல பதக்கத்தை வென்றார்.


இந்தியாவின் சச்சின் யாதவ் 86.27 புள்ளிகள் பெற்று 4-வது இடத்திலும் நீரஜ் சோப்ரா 84.03 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தை பிடித்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%