ஐ.டி. ஊழியர்களிடம் செல்போன்களை திருடிய முன்னாள் ஊழியர் கைது

ஐ.டி. ஊழியர்களிடம் செல்போன்களை திருடிய முன்னாள் ஊழியர் கைது


 

சென்னை: மணலி, சின்​ன​சேக்​காடு, அண்ணா தெரு​வில் வசித்து வருபவர் ரோகன் (27). துரைப்​பாக்​கத்​தில் உள்ள ஐடி நிறு​வனம் ஒன்​றில் பணி செய்து வரு​கிறார்.


இந்த ஐடி நிறு​வனத்​தில் பணிபுரி​யும் ஊழியர்​கள், அலு​வல​கத்​துக்கு உள்ளே செல்​வதற்கு முன்​பு, அவர்​களது செல்​போனை, வெளி​யில் உள்ள அலமாரி​யில் வைத்​து​விட்​டு, பின்​னர் வேலை முடித்து செல்​லும்​போது எடுத்​துச் செல்​வது வழக்​கம்.


இந்​நிலை​யில் ரோகன் கடந்த 19-ம் தேதி மாலை, அவரது செல்​போனை வழக்​கம்​போல அலமாரி​யில் வைத்​து​விட்​டு, பின்பு இரவு பார்த்​த​போது, அவரது ஐ-போனும் சக ஊழியர்​களின் பல செல்​போன்​களும் திருடு​போ​யிருந்​தது தெரிய ​வந்​தது.


இது தொடர்​பாக ஐடி ஊழியர்​கள் துரைப்​பாக்​கம் காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தனர். போலீ​ஸார் வழக்​குப் பதிந்து சிசிடிவி கேமரா காட்​சிகளை ஆய்வு செய்​தனர். இதில் செல்​போன் திருட்​டில் ஈடு​பட்​டது கொருக்​குப்​பேட்​டையைச் சேர்ந்த விஜய்​கு​மார் (23) என்​பது தெரிய​வந்​தது.


இதையடுத்து அவரை நேற்று முன்​தினம் கைது செய்​தனர். அவரிடம் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் விஜய்​கு​மார் மற்​றொரு ஐடி நிறு​வனத்​தில் வேலை செய்து வரு​வதும், இவர் ஏற்​கெனவே தற்​போது செல்​போன் திருடு​போன ஐடி நிறு​வனத்​தில் வேலை செய்​த​போது ஊழியர்​கள் அலமாரி​யில் செல்​போன்​களை வைத்து விட்டு செல்​வதை தெரிந்து கொண்டு செல்​போன் திருட்​டில் ஈடு​பட்​டதும் தெரிய​வந்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%