கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் தடத்தில் 2028-ம் ஆண்டு​ முதல் மெட்ரோ ரயில்களை இயக்க திட்டம்

கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் தடத்தில் 2028-ம் ஆண்டு​ முதல் மெட்ரோ ரயில்களை இயக்க திட்டம்

சென்னை:

கடற்​கரை - வேளச்​சேரி பறக்​கும் ரயில் வழித்​தடத்​தில், வரும் 2028-ம் ஆண்​டு​முதல் மெட்ரோ ரயில்​களை இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. தெற்கு ரயில்​வே​யிடம் இருக்​கும் சென்னை கடற்​கரை - வேளச்​சேரி வழித்​தடத்தை மெட்ரோ ரயில் நிர்​வாகத்​திடம் ஒப்​படைக்​கும் திட்​டத்​துக்கு ரயில்வே வாரி​யம் கொள்கை ரீதி​யான ஒப்​புதலை ஜூலை 31-ம் தேதி வழங்​கியது.


விரை​வில் இதற்​கான புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​தாக உள்​ளது. இதன் மூல​மாக பறக்​கும் ரயில் சேவை​யின் சொத்​து, ரயில் இயக்​கம் மற்​றும் பராமரிப்பு ஆகியவை சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்திடம் ஒப்​படைக்​கப்படும். இதன் பிறகு இந்த வழித்​தடம் முழு​மை​யாக மெட்ரோ ரயில் கட்​டமைப்​புக்கு மாற்​றப்​பட​வுள்​ளது. குறிப்​பாக ஒவ்​வொரு ரயில் நிலை​யத்​தி​லும் மெட்ரோ ரயில் நிலை​யங்​களில் உள்ள வசதி​கள் போன்று ஏற்​படுத்​தப்பட உள்​ளது.


இதுகுறித்​து, மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் கூறிய​தாவது: கடற்​கரை - வேளச்​சேரி பறக்​கும் ரயில் வழித்​தடத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​திடம் ஒப்​படைக்​கும் பணி 2 மாதங்​களுக்​குள் முடிவடை​யும் என எதிர்​பார்க்​கிறோம். மெட்ரோ ரயில் நிர்​வாகத்​திடம் ஒப்​படைக்​கப்​பட்ட பிறகு, இந்த வழித்​தடம் அடியோடு மாற்​றப்பட உள்​ளது.


மெட்ரோ ரயில் என்ன கட்​டமைப்​பில் இயங்கி வரு​கிறதோ அதே​போல ரயில் நிலை​யங்​கள், ரயில் இயக்​கம், சிக்​னல், தண்​ட​வாளம், தொழில்​நுட்​பம், பாது​காவலர் என அனைத்​தும் அமை​யும். இதற்​கான ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றுள்​ளது. வழித்​தடம் ஒப்​படைக்​கப்​பட்ட முதல் 2 ஆண்​டு​களுக்கு இந்த வழித்​தடத்​தில் பறக்​கும் ரயில்​களே இயக்​கப்​படும்.


கட்​டமைப்​பு​கள் முழு​மை​யாக மாற்​றப்​பட்ட பின்பு அதாவது 2028-ம் ஆண்​டு​முதல் இந்த வழித்​தடத்​தில் மெட்ரோ ரயில்​களை இயக்​கத் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. மேலும், வேளச்​சேரி​யில் உள்ள புறநகர் ரயில் பணிமனைக்​கான இடம் மெட்ரோ ரயில்​களை பராமரிப்​ப​தற்கு ஏற்ப மாற்​றப்​பட உள்​ளது. இவ்​வாறு அவர்கள் கூறினர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%