கட்டபொம்மன் நினைவு நாள் முதலமைச்சர் மரியாதை!

கட்டபொம்மன் நினைவு நாள் முதலமைச்சர் மரியாதை!



சென்னை: விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 226-ஆவது நினைவுநாளை ஒட்டி, கிண்டி காந்தி மண்டபம் வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து, உருவப்படத்துக்கு மலர்களை தூவி மரியாதை செலுத்தினார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பி.கே. சேகர்பாபு, மு.பெ. சாமிநாதன், மேயர் ஆர். பிரியா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். “சிப்பாய்ப் புரட்சிக்குப் பல ஆண்டுகள் முன்னரே விடு தலைப் போராட்ட உணர்வைப் பரவச் செய்து, உறுதி குலையாமல் போராடி உயிர் துறந்த பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரராம் கட்டபொம்மனின் தியாகம் தமிழ் மண்ணின் தன்மான உணர்வுக்குச் சான்றாக என்றும் போற்றப்படும்!” என்று தமது சமூக வலைதளப் பக்கத்திலும் முதலமைச்சர் புகழாரம் சூட்டியுள்ளார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%