காஞ்சி, செங்கை மாவட்டங்களில் குறைந்து வரும் கரும்பு சாகுபடி!
Jan 06 2026
23
மதுராந்தகம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆண்டுதோறும் கரும்பு சாகுபடி பரப்பளவு குறைந்து வருவதால், கரும்பு சாகுபடியை ஊக்கப்படுத்தும் வகையில் மானிய திட்டங்களை அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த படாளம் கிராமத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில், கடந்த 1961-ம் ஆண்டு ஆயிரம் டன்கள் கரும்புகளுடன் அரவை தொடங்கப்பட்டது. பின்னர், கடந்த 1995-ம் ஆண்டு 2,500 டன்கள் என விரிவாக்கம் செய்யப்பட்டது.
மேலும், சில நிர்வாக காரணங்களால் கடந்த 2009-ம் ஆண்டு வரை ஆலையில் அரவை நிறுத்தம் செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 2010-ம் ஆண்டு ரூ.33 கோடி அரசு நிதி உதவியுடன் மீண்டும் கரும்பு அரவை தொடங்கப்பட்டது. மேலும், கடந்த 2021-22-ம் ஆண்டு அரவை பருவத்தில் 1. 92 லட்சம் டன் கரும்பு அரைக்கப்பட்டது.
இதேபோல், கடந்த 2022-23-ம் ஆண்டு அரவை பருவத்தில் 2 லட்சம் மெட்ரிக் டன், 2023-24-ம் ஆண்டு பருவத்தில்1.61 லட்சம் டன், 2024-25-ம் ஆண்டில் 70 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டது. இந்நிலையில், நடப்பாண்டான 2025-26-ம் ஆண்டுக்கான அரவையில் 3,200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளதாகவும்.
மேலும், 1 லட்சம் டன் அரவை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், கடந்த 5 ஆண்டுகளாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கரும்பு சாகுபடி பரப்பளவு குறைந்து வருவது மேற்கண்ட ஆலை நிர்வாகத்தின் தகவல்கள் மூலம் தெரிகிறது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?