காஞ்சி, செங்கை மாவட்டங்களில் குறைந்து வரும் கரும்பு சாகுபடி!

காஞ்சி, செங்கை மாவட்டங்களில் குறைந்து வரும் கரும்பு சாகுபடி!


 

மதுராந்தகம்: ​காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் ஆண்​டு​தோறும் கரும்பு சாகுபடி பரப்​பளவு குறைந்து வரு​வ​தால், கரும்பு சாகுபடியை ஊக்​கப்​படுத்​தும் வகை​யில் மானிய திட்​டங்​களை அறிவிக்க வேண்​டும் என விவ​சா​யிகள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.


செங்​கல்​பட்டு மாவட்​டம், மது​ராந்​தகம் அடுத்த படாளம் கிராமத்​தில் கூட்​டுறவு சர்க்​கரை ஆலை அமைந்​துள்​ளது. இந்த ஆலை​யில், கடந்த 1961-ம் ஆண்டு ஆயிரம் டன்​கள் கரும்புகளுடன் அரவை தொடங்​கப்​பட்​டது. பின்​னர், கடந்த 1995-ம் ஆண்டு 2,500 டன்​கள் என விரி​வாக்​கம் செய்​யப்​பட்​டது.


மேலும், சில நிர்​வாக காரணங்​களால் கடந்த 2009-ம் ஆண்டு வரை ஆலை​யில் அரவை நிறுத்​தம் செய்​யப்​பட்​டது. இதையடுத்​து, கடந்த 2010-ம் ஆண்டு ரூ.33 கோடி அரசு நிதி உதவி​யுடன் மீண்​டும் கரும்பு அரவை தொடங்​கப்​பட்​டது. மேலும், கடந்த 2021-22-ம் ஆண்டு அரவை பரு​வத்​தில் 1. 92 லட்​சம் டன் கரும்பு அரைக்​கப்​பட்​டது.


இதே​போல், கடந்த 2022-23-ம் ஆண்டு அரவை பரு​வத்​தில் 2 லட்​சம் மெட்​ரிக் டன், 2023-24-ம் ஆண்டு பரு​வத்​தில்​1.61 லட்​சம் டன், 2024-25-ம் ஆண்​டில் 70 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்​யப்​பட்​டது. இந்​நிலை​யில், நடப்​பாண்​டான 2025-26-ம் ஆண்​டுக்​கான அரவை​யில் 3,200 ஏக்​கர் பரப்​பளவில் பயி​ரிடப்​பட்​டுள்​ள​தாக​வும்.


மேலும், 1 லட்​சம் டன் அரவை இலக்​காக நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ள​தாக ஆலை நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது. இதன்​மூலம், கடந்த 5 ஆண்​டு​களாக காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு மாவட்​டங்​களில் கரும்பு சாகுபடி பரப்​பளவு குறைந்து வரு​வது மேற்​கண்ட ஆலை நிர்​வாகத்​தின் தகவல்​கள் மூலம் தெரி​கிறது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%