சுத்தமான காற்றைக் கோரும் குடிமக்களைக் குற்றவாளிகளைப் போல நடத்துவதா? ராகுல்
போராட்டக்காரா்களில் பலா் குழந்தைகளுடன் பங்கேற்று, சுத்தமான காற்றை உறுதி செய்ய அரசு அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரா்கள் கோரினா்.
இந்த நிலையில், இந்தியா கேட்டில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக போராட்டக்காரர்களை தில்லி காவல்துறையினர் கைது செய்தனர்.
போராட்டக்காரர்கள் கைது செய்யப்படும் விடியோவை பகிர்ந்து எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி தெரிவித்திருப்பதாவது:
சுத்தமான காற்று என்பது மனிதரின் அடிப்படை உரிமை. அமதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு நமது அரசியலமைப்பு உரிமை அளித்துள்ளது.
இந்த நிலையில், சுத்தமான காற்றைக் கோரி அமைதியான முறையில் போராட்டம் நடத்திய குடிமக்களை குற்றவாளிகளைப் போல நடத்துவதா?
காற்று மாசுபாட்டால் கோடிக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நமது குழந்தைகளையும் நமது நாட்டின் எதிர்காலத்தையும் பாதிக்கிறது. ஆனால் வாக்குத் திருட்டு மூலம் ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இதைப் பற்றி கவலைப்படவில்லை, இந்த நெருக்கடியைத் தீர்க்க முயற்சிக்கவும் இல்லை.
சுத்தமான காற்றைக் கோரும் குடிமக்களைத் தாக்குவதற்குப் பதிலாக, காற்று மாசு குறித்து உடனடியாக தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?