சூலூர் அருகே பெண்ணை தாக்கி நகை பறித்த சம்பவம்: 2 பேர் கைது, துப்பாக்கி பறிமுதல்

சூலூர் அருகே பெண்ணை தாக்கி நகை பறித்த சம்பவம்: 2 பேர் கைது, துப்பாக்கி பறிமுதல்

கோவை: சூலூர் அருகே சுத்தியலால் பெண்ணை தாக்கி நகை பறித்த வழக்கில் மூவரை போலீஸார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து துப்பாக்கி, 18 தோட்டாக் கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவை மாவட்டம் சூலூர் சுகந்தி நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி மேரி ஜூலியானா(47). மளிகைக் கடை நடத்தி வருகின்றனர்.


கடந்த 28-ம் தேதி மேரி ஜூலியானா கடையில் இருந்தபோது, சிகரெட் வாங்க வந்த இரண்டு பேர், சுத்தியலால் மேரி ஜூலியானாவை தாக்கி 4 பவுன் நகையை பறித்துச் சென்றனர். சூலூர் போலீஸார் வழக்குப்பதிந்து, ராசிபாளையம் பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த இருவரை நேற்று முன்தினம் பிடித்து விசாரித்தனர்.


அவர்கள் கரூர் மாவட்டம் மணல் மேடு பகுதியைச் சேர்ந்த குணசேகரன்(62), பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த விஜய்குமார் தானி(22) என்பதும், கண்ணம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளிகளாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இருவரும் மேரி ஜூலியானாவை தாக்கி நகை பறித்துச் சென்றது உறுதியானது. இவர்களின் அறையில் இருந்து ஒரு துப்பாக்கி, 18 தோட்டாக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News