சேலம், ஈரோடு, கோவை வழியாக எர்ணாகுளத்துக்கு புதிய வந்தே பாரத் சேவை நவ.7-ம் தேதி தொடக்கம்

சேலம், ஈரோடு, கோவை வழியாக எர்ணாகுளத்துக்கு புதிய வந்தே பாரத் சேவை நவ.7-ம் தேதி தொடக்கம்


சென்னை: தெற்கு ரயில்​வே​யில், சென்னை சென்ட்​ரல் -கோவை, சென்னை எழும்​பூர் - திருநெல்​வேலி, சென்னை சென்ட்​ரல் - மைசூர் வந்தே பாரத் ரயில் உட்பட 11 வந்தே பாரத் ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. மற்ற விரைவு ரயில்​களை காட்​டிலும் வேக​மாக​வும், சொகு​சாக​வும் இருப்​ப​தால், இந்த வந்தே பாரத் ரயில்​களுக்கு பயணி​கள் மத்​தி​யில் நல்ல வரவேற்பு கிடைத்து வரு​கிறது.


மேலும், பல வழித் தடங்​களில் வந்தே பாரத் ரயில்​களை இயக்க வலி​யுறுத்​தி, ரயில்வே அமைச்​சகத்​துக்கு கோரிக்கை விடுக்​கப்​பட்டு வரப்​படு​கிறது. இந்​நிலை​யில், தென்​மேற்கு ரயில்வே சார்​பில், கர்​நாடகா மாநிலம் பெங்​களூரில் இருந்து தமிழகம் வழி​யாக கேரள மாநிலம் எர்​ணாகுளத்​துக்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவை நவ.7-ம் தேதி தொடங்​கப்பட உள்​ளது.


இது குறித்​து, தெற்கு ரயில்வே அதி​காரி​கள் கூறிய​தாவது: கர்​நாடகா மாநிலம், கே.எஸ்​.ஆர். பெங்​களூரு​வில் இருந்து தமிழகம் வழியாக, கேரள மாநிலம், எர்​ணாகுளத்​துக்கு புதிய வந்தே பாரத் ரயில் இயக்க ரயில்வே வாரி​யம், கடந்த 2 வாரங்​களுக்கு முன்பு ஒப்புதல் அளித்​தது. அதன்​படி, இந்த புதிய ரயில் சேவை நவ.7-ம் தேதி தொடங்​கப்பட உள்​ளது. வாரத்​தில் புதன்​கிழமை தவிர, மற்ற நாட்​களில் இந்த ரயில் இயக்​கப்​படும்.


கே.எஸ்​.ஆர் பெங்​களூரில் இருந்து காலை 5:10 மணிக்கு புறப்​படும் வந்தே பாரத் ரயில், கிருஷ்ண​ராஜபுரம், சேலம், ஈரோடு, திருப்​பூர், கோவை, பாலக்​காடு, திருச்​சூர் வழி​யாக மதி​யம் 1:50 மணிக்கு எர்​ணாகுளத்தை சென்​றடை​யும். மறு​மார்க்​க​மாக, எர்​ணாகுளத்​தில் இருந்து பிற்​பகல் 2:20 மணிக்கு வந்தே பாரத் ரயில் புறப்​பட்​டு, இரவு 11:00 மணிக்கு கே.எஸ்​.ஆர். பெங்​களூருவை அடை​யும். இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​தனர்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%