டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: கேரளாவில் 79 வயது முதியவரிடம் ரூ.3.72 கோடி பறித்த கும்பல்

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: கேரளாவில் 79 வயது முதியவரிடம் ரூ.3.72 கோடி பறித்த கும்பல்

கொல்லம்:

கேரளா​வின் கொல்​லம் நகரில் 79 வயது முதி​ய​வரிடம் டிஜிட்​டல் அரெஸ்ட் செய்​துள்​ள​தாக கூறி ஒரு கும்​பல் ரூ.3.72 கோடி மோசடி செய்​துள்​ளது.


கேரளா​வின் கொல்​லம் நகரை சேர்ந்த 79 வயது முதி​ய​வர் ஒரு​வருக்கு கடந்த ஜூலை 7-ம் தேதி வாட்​ஸ்​ஆப் வீடியோ அழைப்​பில் வந்த ஒரு​வர் தன்னை பிஎஸ்​என்​எல் அதி​காரி என அறி​முகப்​படுத்​திக் கொண்​டுள்​ளார். முதி​ய​வரின் செல்​போன் எண் சட்​ட​விரோத செயல்​களில் பயன்​படுத்​தப்​பட்டு இருப்​ப​தாக​வும் இது தொடர்​பாக மும்பை சைபர் கிரைம் போலீ​ஸார் விசா​ரித்து வரு​வ​தாக​வும் கூறி​யுள்​ளார்.


இதையடுத்து போலீஸ் சீருடை​யில் வந்த மற்​றொரு​வர் முதி​ய​வரின் ஆதார் எண்ணை பயன்​படுத்தி ஒரு வங்​கிக் கணக்கு திறக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும் அது குற்​றச் செயல்​களுக்கு பயன்​படுத்​தப்​பட்டு வரு​வ​தாக​வும் அச்​சுறுத்​தி​யுள்​ளார். மேலும் முதி​ய​வரை டிஜிட்​டல் அரெஸ்ட் செய்​துள்​ள​தாக கூறி ஒரு போலி உத்​தரவை காட்​டி​யுள்​ளார். இதில் விசா​ரணை அதி​காரி​யிடம் வாட்​ஸ்​ஆப் அழைப்​பில் தொடர்ந்து தொடர்​பில் இருக்க வேண்​டும் என்ற நிபந்​தனை அடிப்​படை​யில் முதி​ய​வருக்கு போலி​யாக ஜாமீன் வழங்​கப்​பட்​டுள்​ளது.


பிறகு முதி​ய​வரை மிரட்டி ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 29 வரை அந்த கும்​பல் ரூ.3.72 கோடி மோசடி செய்​துள்​ளது. இது தொடர்​பாக முதி​ய​வர் அளித்த புகாரின் பேரில் கொல்​லம் சைபர் கிரைம் போலீ​ஸார் கடந்த செவ்​வாய்க்​கிழமை வழக்​குப் பதிவு செய்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%