தமிழ்நாட்டில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் 12.34 லட்சம் பேர் பயன் பெற்றனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (27.12.25) பெருநகர சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் மண்டலம், கண்ணகிநகர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்" மருத்துவ முகாமினை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம்:
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி சென்னையில் ஒரு மிக பெரிய வகையிலான புதிய மருத்துவ திட்டத்தை தொடங்கி வைத்தார். “நலம் காக்கும் ஸ்டாலின்” என்கின்ற அந்த திட்டத்தை பொறுத்தவரை தமிழ்நாடு முழுவதிலும் இருக்கின்ற அனைத்து வட்டாரங்களிலும் வட்டாரத்திற்கு 3 என்கின்ற வகையிலும் சென்னை பெருநகராட்சியில் 15 இடங்களில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 5 மாநராட்சிகளில் தலா 4 என்கின்ற வகையிலும், 10 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட மாநகராட்சிகள் 19 வட்டாரங்களிலும் தலா 3 என்கின்ற வகையிலும் 1,256 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த முகாம்களைப் பொறுத்தவரை நலம் காக்கும் ஸ்டாலின் என்கின்ற முகாம் வெறும் மருத்துவ முகாமாக மட்டுமல்லாமல் முழு உடல் பரிசோதனை என்கின்ற வகையில் இன்றைக்கு தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் 21வது வாரத்தில் 26வது முறையாக இன்று முகாம்கள் நடைபெற்று வருகிறது. இன்று சென்னையோடு இணைந்து 31 மாவட்டங்களில், 44 இடங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் நடைபெற்று வருகிறது. மேலும் இதுவரை 800 முகாம்கள் நடத்தப்பட்டு, இதன் மூலம் முழு உடல் பரிசோதனை என்கின்ற வகையில் முழுமையாக மருத்துவ பயன் பெற்றவர்களின் எண்ணிக்கை 12,34,908 பேரும் முழு உடற் பரிசோதனை என்கின்ற வகையில் மகத்தான பலனைப் பெற்றுள்ளனர். தமிழ்நாடு முதல்-அமைச்சரின் நலம் காக்கும் ஸ்டாலின் என்கின்ற சீரிய திட்டத்தில் இந்த முகாம்களில் பயன்பெறுபவர்கள் அங்கிகரிக்கபட்ட காப்பீட்டு திட்டத்திற்கான அட்டைகளையும் உடனடியாக பெற்று செல்கிறார்கள். அவர்கள் மட்டுமே இந்த முகாம்களின் வாயிலாக 37,445 பேர் பயன் பெற்றுள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?