திருச்சானூரில் பஞ்சமி தீர்த்த உற்சவம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்

திருச்சானூரில் பஞ்சமி தீர்த்த உற்சவம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்


 

திருப்பதி: திருச்​சானூர் பத்​மாவதி தாயார் கோயில் பிரம்​மோற்​சவம் கடந்த 17-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. அன்று முதல், தின​மும் காலை, இரவு ஆகிய இரு வேளை​களி​லும் தாயார் ஒவ்​வொரு வாக​னத்​தில் பவனி வந்து பக்​தர்​களுக்கு அருள் பாலித்​தார்.


இந்​நிலை​யில் பிரம்​மோற்​சவத்​தின் நிறைவு நாளான நேற்று காலை, திரு​மலை​யில் உள்ள ஏழு​மலை​யான் கோயி​லில் இருந்து பத்​மாவதி தாயாருக்கு பட்டு சீர்​வரிசைகளும், ரூ.1.31 கோடி மதிப்​புள்ள 1.14 கிலோ எடை​யுள்ள தங்க அட்​டிகை மற்​றும் கமல ஹாரம் போன்ற ஆபரணங்​கள் கொண்டு வரப்​பட்​டன. ஏழு​மலை​யான் தனது மனை​வி​யான பத்​மாவ​திக்கு பஞ்​சமி தீர்த்த நிகழ்ச்​சிக்கு இவற்றை சீர் வரிசை​யாக அனுப்பி வைப்​ப​தாக ஐதீகம்.


இந்த சீர்​வரிசைகள் நேற்று காலை திருச்​சானூர் வந்து சேர்ந்​ததும், தாயார், சக்​கரத்​தாழ்​வார், விஸ்​வகேசவர் ஆகியோர் கோயி​லில் இருந்து அரு​கில் உள்ள பத்ம குளத்​திற்கு ஊர்​வல​மாக கொண்டு வரப்​பட்​டனர். அங்​கு, உலர் பழங்​கள், மலர்​களால் சிறப்​பாக அலங்​காரம் செய்​யப்​பட்​டிருந்த மண்​டபத்​தில், சிறப்பு திரு​மஞ்சன சேவை நடந்​தது. மதி​யம் 12.01 மணி முதல் 12.20 மணிக்​குள் சக்​கரத்​தாழ்​வாரின் தீர்த்​த​வாரி நிகழ்ச்சி நடந்​தது. அதேசம​யம் அங்கு குளத்​தில் காத்​திருந்த திரளான பக்​தர்​களும் புனித நீராடினர். அதன் பிறகு தாயார் முத்து பந்​தல் பல்​லக்​கில் ஊர்​வல​மாக கோயிலுக்கு கொண்டு செல்​லப்​பட்​டார். நேற்று மாலை கொடி​யிறக்க நிகழ்ச்​சி​யுடன் பிரம்​மோற்​சவம் நிறைவு பெற்​றது.


பஞ்​சமி தீர்த்​த​வாரி நிகழ்ச்​சி​யில் ஜீயர் சுவாமிகள், திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான அறங்​காவலர் குழு தலை​வர் பி.ஆர். நாயுடு, நிர்​வாக அதி​காரி அனில்​கு​மார் சிங்​கால், சந்​திரகிரி எம்​எல்ஏ நானி, திருப்​பதி எஸ்​.பி. சுப்​பு​ரா​யுடு மற்​றும் அறங்​காவலர் குழு உறுப்​பினர்​கள்​, தேவஸ்​தான அதி​காரி​களும்​ பங்​கேற்​றனர்​. இந்​நிலை​யில் இன்று மாலை 5 மணி முதல் 8 மணி வரை புஷ்ப​ யாகம் நடை​பெறவுள்​ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%