திருச்சியில் சென்னை நகை கடை ஊழியர்கள் மீது மிளகாய் பொடி தூவி 10 கிலோ நகை கொள்ளை

திருச்சியில் சென்னை நகை கடை ஊழியர்கள் மீது மிளகாய் பொடி தூவி 10 கிலோ நகை கொள்ளை

10 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட கார்.

திருச்சி: ​திருச்சி சமயபுரம் அருகே சென்னை நகைக் கடை ஊழியர்​கள் மீது மிள​காய்ப் பொடியை தூவி, 10 கிலோ தங்க நகைகள் கொள்​ளை​யடிக்​கப்​பட்​டுள்​ளன. சென்னை சவு​கார்​பேட்​டை​யில் உள்ள நகைக் கடை மேலா​ளர் பிரதீப்​ஷாட்​(40) மற்​றும் ஊழியர்​கள் இரு​வர் காரில் சென்​னை​யில் இருந்து திண்​டுக்​கல் சென்​றனர். அங்கு நகைகளை விற்​பனை செய்த பின்​னர், மீதமிருந்த 10 கிலோ தங்க நகைகளு​டன் சென்னைக்குப் புறப்பட்டனர்.


திருச்சி மாவட்​டம் சமயபுரம் அரு​கே​யுள்ள சிறுக​னூர் பகு​தி​யில் காரை சாலை​யோரம் நிறுத்​தி​விட்​டு, சிறுநீர் கழிக்​கச் சென்​றனர். அப்​போது மற்​றொரு காரில் வந்த 4 பேர் மேலா​ளர், ஊழியர்​கள் மற்​றும் கார் ஓட்​டுநர் மீது மிள​காய்ப் பொடியைத் தூவி, காரிலிருந்த 10 கிலோ தங்க நகைகளைக் கொள்​ளை​யடித்​துக் கொண்டு தப்​பிச் சென்​றனர். கொள்​ளை​யடிக்​கப்​பட்ட நகை​களின் மதிப்பு சுமார் ரூ.12 கோடி என்று கூறப்படுகிறது.


இது தொடர்​பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்​வ​நாகரத்​தினம் உத்​தர​வின்​பேரில், லால்​குடி டிஎஸ்பி தினேஷ்கு​மார் தலை​மை​யில் 4 தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டு, நகைகளைக் கொள்​ளை​யடித்​தவர்​களைப் போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர். மேலும், கொள்​ளை​யர்​கள் பயன்​படுத்​திய கார் ஆந்​தி​ராவை நோக்​கிச் சென்​ற​தாக கிடைத்த தகவலின்​பேரில், தனிப்​படை​யினர் ஆந்​திரா விரைந்​துள்​ளனர்​.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%