தேசிய சீனியர் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் தமிழக மகளிர் கால்பந்து அணிக்கு திருச்சியில் வழியனுப்பு விழா

தேசிய சீனியர் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் தமிழக மகளிர் கால்பந்து அணிக்கு திருச்சியில் வழியனுப்பு விழா



திருச்சி: 30-வது தேசிய சீனியர் மகளிர் கால்​பந்து சாம்​பியன்​ஷிப்​பின் இறு​திக்​கட்ட போட்​டிகள் வரும் அக்​டோபர் 1-ம் தேதி சத்​தீஸ்கர் மாநிலம் நரேன்​பூரில் தொடங்​கு​கிறது. இதில் கலந்து கொள்​ளும் 10 அணி​கள் இரு பிரிவு​களாக பிரிக்​கப்​பட்​டுள்​ளதன. ‘ஏ’ பிரி​வில் ஒடி​சா, தமிழ்​நாடு, சத்​தீஸ்​கர், மேற்கு வங்​கம், கோவா அணி​கள் இடம் பெற்​றுள்​ளன.


‘பி’ பிரி​வில் மணிப்​பூர், உத்​தரபிரதேசம், பஞ்​சாப், ஹரி​யா​னா, அசாம் அணி​கள் உள்​ளன. தமிழ்​நாடு அணி தனது முதல் ஆட்​டத்​தில் வரும் அக்​டோபர் 1-ம் தேதி சத்​தீஸ்​கருடன் மோதுகிறது. தொடர்ந்து 5-ம் தேதி மேற்கு வங்​கத்​துட​னும், 9-ம் தேதி ஒடி​சாவுட​னும் பலப்​பரீட்சை நடத்​துகிறது தமிழ்​நாடு அணி. போட்​டிகள் அனைத்​தும் ஆர்​.கே.எம் ஆஷ்ரம மைதானத்​தில் நடை​பெறுகின்​றன.


லீக் சுற்​றின் முடி​வில் இரு பிரி​விலும் முதல் இரு இடங்​களை பிடிக்​கும் தலா இரு அணி​கள் அரை இறு​திக்கு முன்​னேறும். அரை இறுதி ஆட்​டங்​கள் 13-ம் தேதி நடை​பெறுகின்றன. சாம்​பியன் பட்​டம் யாருக்கு என்​பதை தீர்​மானிக்​கும் இறு​திப் போட்டி 15-ம் தேதி நடை​பெறுகிறது. இந்​நிலை​யில் இந்த தொடரில் பங்​கேற்​ப​தற்​காக தமிழக அணி​யினர் நேற்று திண்​டுக்​கலில் இருந்து ரயி​லில் சத்​தீஸ்கர் புறப்​பட்​டுச் சென்​றனர். அவர்​கள், திருச்சி ரயில் நிலை​யத்தை அடைந்த போது அங்கு திருச்சி மாவட்ட கால்​பந்து சங்​கம் சார்​பில் வழியனுப்பு விழா நடை​பெற்​றது. இதில் மாவட்ட கால்​பந்து சங்க நிர்​வாகி​கள் பங்​கேற்​றனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%