நவம்பருக்கு பிறகு அமெரிக்கா 25% வரியை நீக்கலாம்: நம்பிக்கை தெரிவிக்கும் உயர் அதிகாரி

நவம்பருக்கு பிறகு அமெரிக்கா 25% வரியை நீக்கலாம்: நம்பிக்கை தெரிவிக்கும் உயர் அதிகாரி

அமெரிக்கா- இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படாததால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு டொனால்டு டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்தார். மேலும், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா மறுப்பு தெரிவித்ததால் கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்த வரி தண்டனை (Penal) வரி என அழைக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் இது பொருளாதாரத் தடை என விமர்சிக்கின்றன. இந்தியா- அமெரிக்கா இடையில் வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில் நவம்பர் மாதத்திற்குப் பிறகு அமெரிக்கா 25 சதவீத வரியை நீக்கலாம் என தலைமை பொருளாதார ஆலோசகர் வி. ஆனந்த நாகேஸ்வரன் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.


கொல்கத்தாவில் வணிகர்களின் வர்த்தக மற்றும் தொழில்துறை சபை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் வி. ஆனந்த நாகேஸ்வரன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-


நாம் அனைவரும் வேலையில் இருக்கிறோம். கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டு வரி விதிப்பு குறித்து பேச இருக்கிறேன். ஒரிஜினல் பரஸ்பர 25 சதவீதம் வரி, தண்டனை 25 சதவீதம் வரை ஆகியவை நாம் எதிர்பார்க்காதது.


புவிசார் அரசியல் சூழ்நிலைகள் இரண்டாவது 25 சதவீத வரிக்கு வழிவகுத்திருக்கலாம் என்று நான் இன்னும் நம்புகிறேன். ஆனால் கடந்த இரண்டு வாரங்களில் சமீபத்திய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, நவம்பர் 30 க்குப் பிறகு தண்டனை வரி இருக்காது என்று எனது உள்மனது சொல்கிறது. இதற்கான குறிப்பிட்ட எந்த காரணமுல் இல்லை. அடுத்த இரண்டு மாதங்களில் அபராத மற்றும் பரஸ்பர வரி விதிப்பு குறித்து ஒரு தீர்வு காணப்படும் என்று நான் நம்புகிறேன்.


இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%