ஜகார்த்தா: இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் இந்தோனேஷியாவில் உள்ள ஜகார்த்தா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து 21-19, 21-18 என்ற நேர் செட் கணக்கில் டென்மார்க்கின் லின் ஹோஜ்மார்க் கஜேர்ஃபெல்ட்டை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். சர்வதேச பாட்மிண்டன் போட்டிகளில் பி.வி.சிந்துவின் 500-வது வெற்றியாக இது அமைந்தது.
ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென் 21-10, 21-11 என்ற செட் கணக்கில் ஹாங் காங்கின் ஜேசன் குணவனை தோற்கடித்து கால் இறுதி சுற்றில் கால்பதித்தார். மற்றொரு இந்திய வீரரான கிடாம்பி காந்த் 11-21, 10-21 என்ற நேர் செட் கணக்கில் 4-ம் நிலை வீரரான சீன தைபேவின் சோ டியன் சென்னிடம் தோல்வி அடைந்தார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றுக்கு முன்னேறிய இகா ஸ்வியாடெக்
மெல்போர்ன்,
கிராண்ட்ஸ்லாம் போட்டி தொடரில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) மேரி பவுஸ்கோவாவை (செக்குடியரசு) எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இகா ஸ்வியாடெக் 6-2, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் தொடர்ந்து 24-வது முறையாக 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?