பீலிபெய் சாகாடும்..

பீலிபெய் சாகாடும்..


நேரிசை வெண்பா!


மென்மை

மயிலிறகாய்

மேன்மையாய்க்

கண்டாலும்


வன்மையாய்

ஏற்றலாகா;

வண்டியின்...


சக்கரத்தின்

அச்சுதான்

சார்ந்தே

முறிந்திடும்!


தக்கவா

றேற்றல்

தக.


மெலிந்தாரே

என்றெண்ணி

மேன்மையின்றித்

துன்பம்


வலிந்தே

கொடுத்தலும்

வன்மை...

நலமின்றிச்


செய்யாமல்

நாளும்

செழிப்புகொண்டால்

சீர்மையே


பெய்யுமே

வாழ்விலே

பீடு!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*

திருவண்ணாமலை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%