போர் நிறுத்தத்திற்குப் பிறகு எப்படி இருக்கிறது காஸா?

போர் நிறுத்தத்திற்குப் பிறகு எப்படி இருக்கிறது காஸா?



போர் நிறுத்த ஒப்பந்தத்தின்போது இரு தரப்பிலும் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. பிணைக் கைதிகளை விடுவிப்பது இஸ்ரேலின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.


ஹமாஸ் தரப்பில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், குறிப்பாக காஸா மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகள் உடனடியாக கிடைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. இதற்கு இஸ்ரேலும் ஒப்புக்கொண்டது. ஏனெனில் இஸ்ரேலின் தாக்குதலில் காஸா நகரம் முற்றிலும் சிதைந்து போயிருந்தது. அங்கு மக்கள் பசியால் செத்துக்கொண்டிருந்தனர். காஸாவுக்கு வரும் மனிதாபிமான உதவிகளைக்கூட இஸ்ரேல் தடுத்தது.


இந்நிலையில் போர் நிறுத்தம், காஸா நகர மக்களுக்கு ஆறுதல் அளித்தாலும் அவர்களின் வாழ்க்கை நிலை என்னவோ அப்படியேதான் இருக்கிறது.


போர் நிறுத்தத்திற்குப் பிறகும் காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. போர் நிறுத்தத்திற்குப் பிறகு அங்கு 241 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர், 619 பேர் காயமடைந்துள்ளனர். போர் தொடங்கியதில் இருந்து உயிரிழப்பு 69,000-யைக் கடந்துள்ளது.


ஹமாஸ் உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகளையும் இறந்த 24 பேரின் உடல்களையும் இதுவரை ஒப்படைத்துள்ளது.


இஸ்ரேல் தரப்பில் சிறையில் இருந்து 2,000 பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


இன்று(நவ. 10) இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனானில் ஒருவர் கொல்லப்பட்டார்.


மேலும், காஸாவில் ஒரு பகுதியில் இஸ்ரேல் படையினர் கட்டடங்களை இடித்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.


இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக ஹமாஸ் குற்றம் சாட்டுகிறது. அதேநேரத்தில் இஸ்ரேல் ராணுவம், ஹமாஸின் நடவடிக்கைகளுக்கு பதிலளிப்பதாகக் கூறுகிறது.


போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய 600 லாரிகள் தினமும் காஸாவுக்கு வரும் என்று இஸ்ரேல் உதியளித்த நிலையில் தற்போது 200 லாரிகள்தான் வருவதாகவும் பிற வணிக லாரிகளும் வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%