மார்ச் 3-ல் 'பிளட் மூன்' - 2026-ன் முதல் சந்திர கிரகணம்!

மார்ச் 3-ல் 'பிளட் மூன்' - 2026-ன் முதல் சந்திர கிரகணம்!


 

2026ஆம் ஆண்டின் முதல் சந்திரகிரகண நிகழ்வு மார்ச் மாதம் நிகழவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கிரகணத்தின்போது சந்திரன் 82 நிமிடங்கள் ரத்த சிவப்பு நிறத்தில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.


சந்திர கிரகணம் என்றால் என்ன?


சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் சந்திரனின் மீது விழுவதால் ஏற்படும் ஒரு வான்நிகழ்வே சந்திர கிரகணம். அப்போது சூரிய ஒளி சந்திரனை அடைவதைத் பூமி தடுக்கிறது, இதனால் நிலவு மங்கலாகத் தோன்றும் அல்லது சிவப்பு நிறத்தில் தெரியும். காரணம் பூமியின் வளிமண்டலத்தின் வழியாக சூரிய ஒளி பயணிக்கும்போது, நீல நிற ஒளி சிதறடிக்கப்படுகிறது, ஆனால் சிவப்பு நிற ஒளி வளைந்து (refracted) சந்திரனை அடைகிறது. இதனால் நிலவு சிவப்பு நிறத்தில் காணப்படும். இதையே உலகம் முழுவதும் Blood moon என அழைக்கின்றனர்.


இந்த சந்திர கிரகணம் மூன்று வகைப்படுத்தப்படுகின்றன. புறநிழல் சந்திர கிரகணம், பகுதி சந்திர கிரகணம், முழு சந்திர கிரகணம் என வகைப்படுத்தப்படுகின்றன. முதலில், புறநிழல் சந்திர கிரகணம் (Penumbral eclipse) ஏற்படும்; அப்போது நிலவு பூமியின் வெளிப்புற நிழல் பகுதிக்குள் நுழைவதால் சற்றே மங்கலாகத் தெரியும். அடுத்ததாக, நிலவு பூமியின் முழுமையான கருநிழலுக்குள் (Umbra) நகரத் தொடங்கும் போது பகுதி கிரகணம் (Partial eclipse) ஏற்படும். இறுதியாக, முழுமை நிலையின் (Totality) போது, நிலவு முழுவதுமாக பூமியின் கருநிழலுக்குள் இருப்பதால் அது சிவப்பு நிறத்தில் ஒளிரும்.


தற்போதைய வானியல் தரவுகளின்படி, மார்ச் நிகழ்வில் இந்த முழுமை நிலை சுமார் 58 நிமிடங்கள் மற்றும் 19 வினாடிகள் நீடிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இருப்பினும், வளிமண்டல நிலைமைகளைப் பொறுத்து, நிலவு சிவப்பு நிறத்தில் தோன்றும் அந்த நிலை சுமார் 82 நிமிடங்கள் வரை நீடிப்பது போன்ற உணர்வைத் தரக்கூடும் என சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.


சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத தளங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்

 

சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதிகளின் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத தளங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்குறிவைத்து அமெரிக்க படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன.


அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கடந்த டிசம்பர் 13-ம் தேதி ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.


அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 35 இடங்களைக் குறிவைத்து 90-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. மொத்தம் 20 விமானங்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டன.


இந்தத் தாக்குதல்கள் சிரியாவின் எந்தப் பகுதியில் நடத்தப்பட்டது அல்லது இதில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற விவரங்களை அமெரிக்க ராணுவம் இன்னும் வெளியிடவில்லை.


இருப்பினும், பயங்கரவாத மையங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%